Nellai - Thalapathy [File Image]
தென்மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால், பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நினைத்த நடிகர் விஜய், நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.
முதலில் நிவாரணம் வழங்குவதற்காக நடிகர் விஜய் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால், பாதுகாப்புக்கு நின்றிருந்தவர் திடீரென மண்டபத்தின் கதவை மூட, அது எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் முதுகு பகுதியை தாக்கி கீழே தடுக்கி விழ பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சற்று சுதாரித்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது அவரை நேரில் பார்த்து பரவசமடையும் ரசிகர்கள் அவருடைய கண்ணத்தை கிள்ளுவதும், முத்தம் கொடுப்பதுமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில், விஜய்யிடம் நிவாரணம் பெற வந்த பெண், அவரது கையை தனது தோள் மீது போட்டுக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தார்.
மேலும், மேடையில் நின்று கொண்டிருந்த விஜய்யிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களது ஆசையை நிறைவேற்ற விஜய் எடுத்த செல்ஃபி தற்போது வைரலாகி வருகிறது. நிவாரணப் பொருட்களை கொடுத்துவிட்டு நடிகர் விஜய் புறப்பட்டார். அலை கடலாக திரண்ட ரசிகர்கள் அவரைக் காண மண்டபம் வெளியேவே காத்துக் கொண்டிருந்தனர்.
நிவாரணம் வேண்டாம் செல்பீ மட்டும் போதும் நமக்கு.
விஜய் கையைப் பிடித்து தன் தோள் மீது போட்டு போஸ் கொடுத்த பெண்.
நடிகர் விஜய்-யை பார்த்த உற்சாகத்தில் துள்ளிக் குதித்த ரசிகை.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…