Bhumika Chawla [Image source : IMDb]
ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை பூமிகா கடைசியாக தமிழ் த்ரில்லர் படமான கண்ணை நம்பாதே படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2022 இல், அவர் சித்தந்த் குப்தா மற்றும் வேதிகா பின்டோ நடித்த இந்தி திரைப்படமான ஆபரேஷன் ரோமியோ படத்திலும் நடித்திருந்தார்.
அதைப்போல, தெலுங்கு படங்களான சீதா ராமம் மற்றும் பட்டர்ஃபிளை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து மீண்டும் பல படங்களில் நடித்து வரும் பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” காலம் மாறிய பிறகும் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, நடிகைகளுக்கு முக்கிய துவம் கொடுக்கவில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நெட்ஃபிக்ஸ் வந்துவிட்டது, அமேசான் வெப் தொடர்கள் வந்துவிட்டது. வெப்தொடர்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ளது.
ஆனாலும், சினிமாவில் பழைய நிலையே தொடர்கிறது. கமர்ஷியல் படம் இன்றும் அதே அமைப்பைக் கொண்டுள்ளது. ஹீரோ இன்னும் ஹீரோவாக நடிக்கிறார், மேலும் கதாநாயகி பின்னோக்கிப் போய்விட்டார்கள். இது மாற வேண்டும் இந்த மாற்றம் தொழில்துறையிலிருந்து வர வேண்டும்” என கூறியுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…