முக்கியச் செய்திகள்

அவசரப்பட்டு செய்துவிட்டேன்…சீரியல் நடிகைகளை கல்யாணம் பண்ணாதீங்க…செந்தில் கூறிய பகீர் தகவல்.!!

Published by
பால முருகன்

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீஜாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆண் குழந்தையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிறந்தது.

Saravanan Meenatchi [Image source :instagram/@mirchisenthil983]

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிர்ச்சி செந்தில் ” சீரியல் நடிகர்கள், நடிகைகளை திருமணம் செய்துகொள்வது மிகவும் தவறான ஒன்று” என கூறியுள்ளார். இது குறித்து பேசிய செந்தில் ” இப்போது இருக்கும் காலகட்டத்தில் நடிகர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா..? அவர்கள் சீரியல்களில் யாருடன் இணைந்து நடிக்கிறார்களோ அவர்களை அந்த கதாபாத்திரங்களிலே பார்த்து காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர்.

Senthil Kumar sreeja [Image source :instagram/@mirchisenthil983]

என்னை பொறுத்தவரை இது மிகப்பெரிய தவறு தான். நானும் அப்படித்தானே ஸ்ரீஜாவவுடன் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவளை மீனாட்சியாகவே பார்த்து காதலித்தேன் திருமணமும் செய்துகொண்டேன்.  ஆனால் மீனாட்சி கேரக்டர் வேற…ஸ்ரீஜா கேரக்டர் வேற.

Senthil Kumar sreeja [Image source :instagram/@mirchisenthil983]

அவர் மீனாட்சி கேரக்டர் போலவே ஸ்ரீஜா கேரக்டர் இருக்கும் என நினைத்து அவசரபட்டு திருமணம் செய்துவிட்டேன். நான் ஏதாவது சொன்னால் கூட நீ எதற்கு என்னை எதுக்கு சொல்ற என்று கோபப்படும் பிடிவாதம் பிடித்தவர். ஸ்ரீஜாவின் ஒரு சில குணங்களை மட்டுமே தெரிந்து கொண்டு அவசரப்பட்டு திருமணம் செய்துகொண்டேன். சீரியல் நடிகைகளை கல்யாணம் பண்ணாதீங்க. எனவும் கூறியுள்ளார்.

Senthil Kumar [Image source :instagram/@mirchisenthil983]

சீரியல் நடிகைகளை திருமணம் செய்து கொள்வது தவறு என மிர்ச்சி செந்தில் கூறியுள்ளது தற்போது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மிர்ச்சி செந்தில் தற்போது பல சீரியல்களில், பல திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

10 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago