நான் ஒன்னு முட்டாள் இல்லை! அந்த கேள்விக்கு கடுப்பான நடிகை வாணி போஜன்!!

Published by
பால முருகன்

வாணி போஜன் : சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி அடிக்கடி வதந்தியான விஷயங்கள் பரவுவது என்பது வழக்கமான ஒன்று அதன்பிறகு அந்த நடிகைகள் அதற்கு விளக்கமும் அளித்து நாம் பார்த்திருப்போம். அப்படித்தான் நடிகை வாணி போஜனும் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்ட போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நடிகை வாணி போஜன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்திற்கு முன்னதாக அந்த கதையை ஒரு நடிகரிடம் கூறிவிட்டு தான் அந்த ஹீரோ சம்மதம் தெரிவித்தால் மட்டும்தான் அந்த படத்தில் நடிப்பார் என செய்திகள் வைரலாகி வந்தது. இதனையடுத்து,  சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது கலந்து கொண்ட வாணி போஜனிடம் இந்த தகவலுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது

அதற்கு பதில் அளித்த வாணி போஜன் “இப்படி ஆன தவறான தகவல்களை போடுவது யூடியூபில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்காக என்று நான் நினைக்கிறேன்.  ஏனென்றால், இன்னொரு ஹீரோ கதை சொல்லி ஓகே சொன்னதுக்கு பிறகு நான் அந்த படத்தில் நடிக்க முட்டாள் இல்லை எனக்கும் அறிவு இருக்கிறது. எனவே இது போன்ற வதந்தியான விஷயங்களை நம்ப வேண்டாம்” என கூறி உள்ளார்.

சின்னத்திரையில் ஒரு காலத்தில் கலக்கி கொண்டு இருந்த நடிகை வாணிபோஜன் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், நடிகை வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய் , ஆரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago