தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் சிறந்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன்,ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனையும் படைத்தது.
இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தேசியவிருதுகள் மட்டுமின்று பல விருதுகளை குவித்து வருகிறது. இவர் தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். வெற்றிமாறன் இயக்கும் படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ரசிகர்களையும் கவர்கிறது.
தமிழில் மட்டும் இல்லாமல் வெற்றிமாறனுக்கு தெலுங்கு, ஹிந்தி போன்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. இந்த நிலையில் வெற்றிமாறன் குறித்து பிரபல தெலுங்கு நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்கள்.
ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் தற்போது “ஆர்ஆர்ஆர்” என்ற பிரமாண்ட திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாக நாளை இந்த படம் வெளியாகவுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரனிடம் தமிழில் எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசை என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது…அதற்கு பதிலளித்த இருவரும் ” வெற்றிமாறன் சார் படத்தில் நடிக்கவேண்டும்…கமர்ஷியல் கதையை மிகவும் சிறப்பாக இயக்குகிறார்..அசுரன் திரைப்படத்தை பார்த்து மிரண்டு விட்டோம்..நாங்கள் தமிழில் படம் நடித்தால் அது நிச்சயம் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படமாகத்தான் இருக்கும்” என கூறியுள்ளனர்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…