முக்கியச் செய்திகள்

Brother : போஸ்டர் மட்டும் தான் காப்பியா இல்ல கதையுமா? ஜெயம் ரவியின் புதுப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Published by
பால முருகன்

ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கான தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்கியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த  திரைப்படத்தை ஜீவை வைத்து ‘சிவா மனசுல சக்தி’, உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய  பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இளம் நடிகையாக வளம் வரும் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கஉள்ளார்.

இந்த ‘பிரதர்’ திரைப்படத்திற்கு இதுவரை ஜெயம் ரவிக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் “பிரெத் ஆப் டெஸ்டினி’ என்ற சீன வெப் சீரிஸின் போஸ்டரில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Brother [File Image]

“பிரெத் ஆப் டெஸ்டினி’ போஸ்டரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’  திரைப்படத்தின் போஸ்டரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் பலரும் போஸ்டர் கூடவா காப்பி? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும்,  இந்த திரைப்படம் ரீமேக் திரைப்படமா அல்லது இல்லன்னா போஸ்டர், கதை ரெண்டையும் சுட்டுட்டீங்களா? எனவும் சினிமா விமசகர் ப்ளூ சட்டைமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Breath of Destiny [File Image]

“பிரெத் ஆப் டெஸ்டினி’ ஒரு 40-எபிசோட் சி-டிராமா தொற்றுநோய்களின் போது  ஓடிடியில் ஓடியது.அவசர மருத்துவ பணியாளர்கள் குழு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தீவுக்கு  எப்படி செல்கிறார்கள், பரபரப்பான நகரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிற்கு சென்று அங்கு என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago