mankatha ajith [File Image]
அஜித் ரசிகர்கள் அனைவரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலே படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கியது . இந்த திரைப்படத்தை பார்க்க கோலிவுட் சினிமாவை ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.
விடாமுயற்சி படத்தில் நடந்த அதிரடி மாற்றம்! கவர்ச்சிக்காக நடிகையை மாற்றிய படக்குழு!
படத்திற்கான படப்பிடிப்பும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த அறிவிப்பும் கூட வெளியாகவே இல்லை வரும் வெறும் சினிமா வட்டாரத்தில் கசிந்த தகவல் தான் ரசிகர்களுக்கு அப்டேட் ஆக அமைந்தது. படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அப்டேட்டை விடாமல் இருப்பதன் காரணமாக அஜித் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், படத்தில் சஞ்சய் தத் நடிப்பதன் காரணமாக படத்தில் வில்லனாக அவர் தான் நடிக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க வில்லையாம். அவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறாராம்.
வில்லனாக நடிகர் அர்ஜுன்தான் நடித்து வருகிறாராம். இதனை பட குழு சஸ்பென்ஸ் -ஆக வைத்திருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே, லியோ திரைப்படத்திலும் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேரும் அப்படியே விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளதாக வரும் தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படத்தில் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் நடித்த வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக புதிய தகவலும் இன்று காலையிலிருந்து வெளியானது. அது என்னவென்றால் விடாமுயற்சி திரைப்படத்தில் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…