Categories: சினிமா

Annamitta Kai: சீதையாக ஜெயலலிதா…திமுகவிலிருந்து எம்ஜிஆரின் கடைசி படம்! ‘அன்னமிட்ட கை’ படத்தின் சிறப்பு!

Published by
கெளதம்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னமிட்ட கை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.  1972ல் இதே நாளில் வெளியான இந்த திரைப்படம் கலர் படம் வருவதற்கு முன், அப்போதய காலகட்டத்தில் எம்.ஜி.ஆரின் கடைசி கருப்பு வெள்ளை படம் இதுவாகும்.

இயக்குனர் எம்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘அன்னமிட்ட கை’ படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா, பாரதி, சிவகாமியாக பண்டரி பாய், நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், வி.கே.ராமசாமி, நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை எம்.எஸ்.சிவசாமிக்கு சொந்தமான ராமச்சந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, நாயர் ஏஎல் நாராயணன் கதை எழுதியிருந்தார். வாலியின் பாடல் வரிகளுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.

காலங்கள் கடந்தோடினாலும், இந்த திரைப்படம் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. காரணம் படத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகளும், பாடல்களும் மக்கள் மனதில் நீங்காமிடம் பிடித்திருந்தது. இந்த படத்தில்

மேலும், படத்தில் இடம்பெற்றுள்ள, 16 வயதினிலே 17 பிள்ளையம்மா, அன்னமிட்ட கை, ஒன்னொன்னா ஒன்னொன்னா, மயங்கி விட்டேன், அழகுக்கு என அனைத்தும் மனதில் நின்று இசைத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 16 வயதினிலே 17 பிள்ளையம்மா பாடல் கேரளாவின் குட்டிக்கானம் ஆஷ்லே தோட்டத்தில் 17 குழந்தைகளுடன் படமாக்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்த பாடலுக்கு சிறப்புண்டு.

அதுபோல், ’16 வயதினிலே 17 பிள்ளையம்மா’ என்ற பாடலின் பெயரை கமல்-ரஜினி நடந்திருக்கும் படத்துக்கு தலைப்பாக ’16 வயதினிலே’ என்று வைத்திருப்பார் இயக்குனர் பாரதி ராஜா. இப்படி படத்துக்கு ஒரு சிறப்பு என்றால், எம்.ஜி.ஆர் நடிகரும் மட்டும்மல்லாமல், அரசியலிலும் ஈடுபட்டவர் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில், சினிமா பிரபலமாக இருந்த பொழுது, தனக்கு கிடைத்த பெயரை பயன்படுத்தி அரசியலில் நுழைந்தார்.

ஆரம்பகட்டத்தில், 1972ல், அண்ணாதுரை தலைமையிலான திமுக கட்சியின் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், திமுக-வில் இருந்தபோது நடித்த கடைசிப் படம் அன்னமிட்ட கை, இது மேலும் ஒரு சிறப்பு. இந்தப் படம் வெளியாகி 1 மாதத்திற்குப் பிறகு, அவர் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, 1972 அக்டோபர் 17 அன்று தனது சொந்தக் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago