இயக்குனர் பாலா என்றால் பயம்.?! மீண்டும் சூர்யாவுடன் இணைவாரா கீர்த்தி சுரேஷ்?

Published by
மணிகண்டன்

சூர்யா நடிக்கும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க 3 மாதம் கால்ஷீட் கேட்டுள்ளனர் இயக்குனர் பாலா படக்குழுவினர். ஆனால், கால்ஷீட் மேலும் நீடிக்குமா என கீர்த்தி தரப்பு யோசிக்கிறதாம்.

தமிழ் சினிமாவில் மிக திறமையான, தனது கதைக்களத்துக்கு ஏற்ப காட்சிகளை எந்தவித சமரசமும் இன்றி படமாக்கும் இயக்குனர்களில் முதன்மையானவர் இயக்குனர் பாலா. இவரது படத்தில் நடித்தால் நடிப்புக்கென்று எந்தவித பயிற்சியும் தேவைப்படாது எனும் அளவிற்கு நடிகர்களிடம் இருந்து நடிப்புக்கான வேலையை வாங்கிவிடுவார்.

ஆனால், சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க திணறி வருகிறார் என்பதே உண்மை. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான ஹிட் படமென்றால் அது பரதேசி தான். அதற்கடுத்து அவர் இயக்கத்தில் வெளியான தரை தப்பட்டை, வர்மா ஆகிய படங்கள் எதிர்மறை விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

தற்போது மீண்டும், தனது ஆஸ்தான கதாநாயகர்களுள் ஒருவரான சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளார். இந்த புதிய படத்தை சூர்யாவே தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க வைக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 3 மாதம் மட்டுமே தேவைப்படுகிறது. ஒரே கால்ஷீட்டாக கொடுத்தால் பிப்ரவரியில் படம் முடிந்துவிடும் என கூறுகிறார்களாம். ஆனால், கீர்த்தி தரப்போ, பாலா படத்தில் நடிப்பதில் பிரச்சனை இல்லை, ஆனால், 3 மாதம் என கூறி, படம் சரியாக வரவில்லை என்றால் மேலும் கால்ஷீட் தேவைப்படும் என யோசிக்கின்றனரானராம்.

மேலும், இயக்குனர் பாலா, ஷூட்டிங்கில் மிகவும் ஸ்ட்ரிக்ட், தான் நினைத்தபடி காட்சி வர நடிகர்களை போட்டு வாட்டி வதைத்து விடுவார் என பேச்சுகளும் உண்டு. அதனை நினைத்தும் கீர்த்தி பின்வாங்குகிறாரா என தெரியவில்லையே என சினிமாவாசிகள் பேசிவருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

1 hour ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

1 hour ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

2 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

2 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

3 hours ago

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்து வியான் முல்டர் சொன்ன காரணம்!

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…

3 hours ago