நிஜத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு சொந்த வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் நடிகர் லாரன்ஸ்.
சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.
ராசாகண்ணுவாக மணிகண்டனும், செங்கொடியாக லிஜிமோல் ஜோஸ்-ம் அவர்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். அதில், ராசா கண்ணுக்கும் , செங்கொடிக்கும் சொந்தமாக கல்லு வீடு கட்டுவது கனவாகவே இருக்கும்.
இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. நிஜத்தில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி இன்னும் உயிருடன் ஏழ்மை நிலையில் இருக்கிறார். அதனை ஒரு இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதனை பார்த்த நடிகர் லாரன்ஸ் அந்த இணையதளம் மூலம் பார்வதி அம்மாளின் நிலைமை தெரிந்துகொண்டு, அவருக்கு சொந்தமாக வீடு கட்டி தர முன்வந்துள்ளார். இதனை அவரே தனது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பழங்குடி இருளர் மக்களில் 67 குடும்பங்களுக்கு பட்டா வழங்க விழுப்புரம் ஆட்சியர் மோகன் அண்மையில் ஆணை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…