எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! – மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஹேப்பி டிவீட்.
நேற்று இரவு திடீரென மாநாடு திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆதலால், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் டிவீட் போட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டுவிட்டனர்.
நேற்று இரவு, நள்ளிரவு வரை மாநாடு நிதி பிரச்சனை நீண்டு கொண்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் அதிகாலை ஷோ ரத்து செய்யப்பட்டது. கடைசியில் நள்ளிரவில் மாநாடு பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது. முதல் ஷோ 9 மணியில் இருந்துதான் ஆரம்பித்தது.
மாநாடு முதல் ஷோ பார்த்த அனைத்து ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அனைத்து பிரச்னையும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்து படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதால், ‘எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! ‘ என்று சந்தோசமாக டிவீட் செய்துள்ளார்.
மேலும், தற்போது, ‘ நானே எதிர்பார்க்காத தடங்கல் மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..’ எனவும் தனது டிவீட் மூலம் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவீட் செய்துள்ளார்.
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…