Categories: சினிமா

என் கதறலை கேட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தாரு! மாரி செல்வராஜ் பேச்சு!

Published by
பால முருகன்

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க வேண்டும் என்பதற்காக இய்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கருங்குளம், முத்தலாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்றார்கள்.

வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவி செய்தது குறித்து மாரிசெல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளையும் வெளியீட்டு இருந்தார். இதனையடுத்து, ஒரு தரப்பினர் மாரிசெல்வராஜுக்கு அங்கு என்ன வேலை என்பது போல விமர்சிக்க தொடங்கினார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ”  வெள்ளம் என்னுடைய ஊரில் வந்துள்ளது. என்னுடைய மக்கள் எங்க அம்மாவை காணும் எங்களுடைய அண்ணனை காணும் என எனக்கு கால் செய்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். எனவே, அவர்களுக்காக நான் ஓடி வந்து என்னால் எந்த அளவுக்கு உதவி செய்ய முடியுமோ அதே அளவிற்கு உதவிகளை செய்து வருகிறேன்,

நான் சென்னை சென்ற காரணத்தால் தான் நான் இயக்குனர். அதுவரைக்கும் இந்த ஊருல ஒருத்தன்தான் நான். இந்த மக்கள் என்ன நம்புறதுதான் என்னோட பலம். எனவே, நான் அதுக்காகவாவது எதையாவது செய்யவேண்டும். இந்த சமயத்தில் அமைச்சர் உதயநிதி சாருக்கு நான் கால் பண்ணிக் கூப்பிட்டேன். அவரு என்னோட கதறலக் கேட்டதும் சேலத்துல இருந்து உடனே கிளம்பி வந்துட்டாரு. எங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைத்தது” எனவும் இயக்குர் மாரிச்செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Recent Posts

LSG vs SRH : லக்னோவுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு.? ஹைதராபாத் அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…

11 minutes ago

“சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு”- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு.!

சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…

25 minutes ago

ரவி மோகன் விவகாரம்: ”நாளைய விடியல்” – கெனிஷாவின் பதிவால் பரபரப்பு.!

சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி…

59 minutes ago

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

2 hours ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

3 hours ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

3 hours ago