சினிமா

விக்கிக்கு முத்த மழை பொழிந்த நயன்.. ஓஹோ விஷயம் இதுதானா!’

Published by
கெளதம்

சென்னை : நடிகை நயன்தாராவின் கணவரும் திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) தனது 39வது பிறந்தநாளை கொண்டுகிறார்.

அவரது சிறப்பு நாளைக் கொண்டாடும் வகையில், விக்கியின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு சிறப்பு காதல் குறிப்பை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் விக்கிக்கு முத்த மழை பொழிந்த ரொமான்டிக் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்,  ஹேப்பி பர்த்டே மை எவ்ரிதிங். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நான் உன்னை நேசிக்கிறேன். “உயிர், உலகம் போல உங்களுக்கு அனைத்தும் கிடைக்கனும் ” என காதல் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

2015-ல் ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மலர்ந்த காதல், சில வருட டேட்டிங்கிற்குப் பிறகு, இருவரும் 2021-ல் ஒரு தனிப்பட்ட விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டது மட்டுமல்லாமல், 2022-ல், நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும்  சென்னையில் ஒரு பிரமாண்ட விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த உடனேயே, இந்த ஜோடி 2022 அக்டோபரில் தங்களுக்கு இரட்டை மகன்கள் பிறந்ததாக அறிவித்தனர். வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்ட ஆண் குழந்தைகளை வரவேற்று உயிர் மற்றும் உலகம் என்று பெயர் வைத்ததாக அறிவித்தனர். அடிக்கடி தங்களது மகன்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதும் உண்டு.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

3 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago