ப்ளீஸ் இந்த மாதிரி ரோல் கொடுங்க! வாய்ப்புக்கு கெஞ்சும் தர்ஷா குப்தா!

Published by
பால முருகன்

தர்ஷா குப்தா : தனக்கு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது என்று தர்ஷா குப்தா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருடைய பெயர் மக்களுக்கு மத்தியில் தெரிய வந்தது. இதில்  கிடைத்த வரவேற்பின் காரணமாக தான் தர்ஷா குப்தாவுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது என்றே சொல்லலாம்.

நிகழ்ச்சிக்கு பிறகு ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட், ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும், படங்களில் நடித்த பிறகு இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட  ஒரு பக்கம் அடுத்தடுத்து படங்களில்  நடிக்க தர்ஷா குப்தா கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது கூட மெடிக்கல் மிராக்கள் படத்தில் கூட நடித்து வருகிறார். இதற்கிடையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு நடிக்க விருப்பமான கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை தர்ஷா குப்தா ” எனக்கு சேதுபதி படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக ரம்யா நடித்த கதாபாத்திரத்தை போல படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது.

அந்த படத்தில் அவர் ரொம்பவே சூப்பராக நடித்து இருப்பார். ஒரு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது எனக்கு பிடித்து இருந்தது. அந்த படத்தில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்களை பார்க்கும்போது நான் இந்த படத்தில் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்து பார்ப்பேன். அந்த மாதிரி ஒரு ரோலில் நடிக்க தான் எனக்கு ஆசை இருக்கிறது.

ஆனால், எனக்கு வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் பெய் கதாபாத்திரம் அல்லது கர்ப்பிணி பெண் கதாபாத்திரம் என இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறது. யாரவது ப்ளீஸ் சேதுபதி படத்தில் வரும் ரொமாண்டிக்கான மனைவி ரோலை போல ஒரு ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுங்க” என்றும் நடிகை தர்ஷா குப்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

18 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

36 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 hours ago