Dharsha Gupta
தர்ஷா குப்தா : தனக்கு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது என்று தர்ஷா குப்தா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருடைய பெயர் மக்களுக்கு மத்தியில் தெரிய வந்தது. இதில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தான் தர்ஷா குப்தாவுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது என்றே சொல்லலாம்.
நிகழ்ச்சிக்கு பிறகு ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட், ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும், படங்களில் நடித்த பிறகு இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட ஒரு பக்கம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தர்ஷா குப்தா கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறார்.
அந்த வகையில், தற்போது கூட மெடிக்கல் மிராக்கள் படத்தில் கூட நடித்து வருகிறார். இதற்கிடையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு நடிக்க விருப்பமான கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை தர்ஷா குப்தா ” எனக்கு சேதுபதி படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக ரம்யா நடித்த கதாபாத்திரத்தை போல படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது.
அந்த படத்தில் அவர் ரொம்பவே சூப்பராக நடித்து இருப்பார். ஒரு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது எனக்கு பிடித்து இருந்தது. அந்த படத்தில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்களை பார்க்கும்போது நான் இந்த படத்தில் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்து பார்ப்பேன். அந்த மாதிரி ஒரு ரோலில் நடிக்க தான் எனக்கு ஆசை இருக்கிறது.
ஆனால், எனக்கு வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் பெய் கதாபாத்திரம் அல்லது கர்ப்பிணி பெண் கதாபாத்திரம் என இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறது. யாரவது ப்ளீஸ் சேதுபதி படத்தில் வரும் ரொமாண்டிக்கான மனைவி ரோலை போல ஒரு ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுங்க” என்றும் நடிகை தர்ஷா குப்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…