Categories: சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் சர்ச்சை கருத்துக்கு மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா.!

Published by
கெளதம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், நடிகர் அர்ஜுன் நடித்த புஷ்பா என்ற தெலுங்கு படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லியின் பாத்திரம் பற்றி பேசியதை அடுத்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் மேலாளர் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் ‘என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில்,எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும்.

எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்’என பதிலளித்தேன். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. ரஷ்மிகா மந்தானாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என தெரிவித்து கொண்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யாவின் பதிலுக்கு பதிலளித்த ராஷ்மிகா, ஹாய் லவ்.. இப்பத்தான் இதை பார்த்தேன். விஷயம் என்னவென்றால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை நான் நன்றாக புரிந்து கொண்டேன். மேலும், எங்களை விளக்குவதற்கு எங்களுக்கு எந்த காரணமும் இல்லை என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும், உங்கள் மீது அன்பும் மரியாதையும் மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் ஃபர்ஹானா காதல் படத்திற்கு மீண்டும் ஆல் தி பெஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago