சினிமா

இரவு நேரங்களில் படப்பிடிப்பு…ரொம்ப ஏக்கமா இருக்கு! நடிகை சஞ்சிதா ஷெட்டி வேதனை!

Published by
பால முருகன்

சஞ்சிதா ஷெட்டி தற்போது இயக்குனர் ரமேஷ் பாலகிருஷ்ணன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயவலை’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் அமீரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக படத்தின் படப்பிடிப்பு இரவு நேரங்களில் தான் அதிகமாக எடுத்திருப்பார்கள். இந்நிலையில், இரவு நேரங்களில் பட பிடிப்பு நடைபெற்று வந்ததால் சற்று கஷ்டமாக இருந்ததாக நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” மாயவலை படத்தின் படப்பிடிப்பு விஜிபி கோல்டன் பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது.

அங்கு படப்பிடிப்பு நடைபெற்றபோது எனக்கு பழைய நினைவுகள் தான் நினைவுக்கு வந்தது. ஏனென்றால், அதே இடத்தில் தான் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் ரவிக்கு ஜோடியாக, என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படமான தில்லாலங்கடி படத்தில் நடித்தேன். எனவே அந்த நினைவுகள் தான் எனக்கு வந்தது. மாயவளையின் மற்றொரு பகுதி படப்பிடிப்பு நள்ளிரவு நேரத்தில் ECR பகுதியில் நடைபெற்றது.

ஹீரோயினா நடிச்சு போர் அடிச்சிட்டு! அதான் அப்படி இறங்க போறேன்- வசுந்தரா பேச்சு!

அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் தாமதமாக தூங்கியதால், நாங்கள் அனைவரும் சத்தம் போடுவதையும் அவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்க்க வேண்டியிருந்தது.அந்த நேரத்தில் மட்டும் படம் எடுக்க ரொம்பவே கஷ்ட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் சத்தமாக பேசி கொள்ள முடியாது என்ற காரணத்தால் போன் மூலம் தான் அணைத்து விஷயங்களை தெரிந்துகொண்டோம்.

எப்படியோ ஒரு வழியாக படத்தை நல்லபடியாக எடுத்து முடித்துவிட்டோம். படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மாயவலை படக்குழுவுடன் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திடீரென படப்பிடிப்பு எல்லாம் முடிந்து வீட்டிற்கு கிளம்புகிறோம் என்றவுடன் ஒரு கஷ்ட்டம் இருந்தது” எனவும் நடிகை சஞ்சிதா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை சஞ்சிதா ஷெட்டி அழுக்கன் அழகக்கிரன், தில்லாலங்கடி, கொல்லைக்காரன், சூது கவ்வும், என்னோடு விளையாடு, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக  நடித்த சூது கவ்வும் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

2 minutes ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

28 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

1 hour ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

3 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago