இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Published by
பால முருகன்

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார்.

காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சென்ராயன். இவர் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் பொல்லாதவன் படத்தை கூறலாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான இந்த பொல்லாதவன் திரைப்படத்தில் சென்ராயன் பைக் திருடன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய காட்சிகள் எல்லாம் குறைவாக இருந்தாலும் கூட அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம்.

இந்த படம் வெளியான சமயத்திலும், படத்தில் நடித்து கொண்டு இருந்த சமயத்திலும் ஒரு அலுவலகம் ஒன்றில் வேலை செய்து கொண்டு இருந்தாராம். அந்த சமயம் அவருடைய முதலாளி 20 டிக்கெட் வாங்கி கொண்டு சென்ராயன் படத்தில் நடித்து இருக்கிறார் எல்லாரும் போகலாம் என்று கூறினாராம். அந்த சமயம் பார்த்து சென்ராயன் முதலாளிக்கு வெளி ஊரில் வேலை வந்து விட்டதாம்.

உடனே அவருடைய முதலாளி அந்த 20 டிக்கெட்டையும் கொடுத்து நீ உன்னுடைய நண்பர்களை அழைத்து சென்று படம் பாரு என்று கூறினாராம். சென்ராயன் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு  நாம் ஏன் நமது நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும் பேசாமல் பிளாக்கில் விற்று விடலாமே என்று கூறிவிட்டு பொல்லாதவன் படம் ஓடிய திரையரங்கு ஒன்றில் அதாவது காசி திரையரங்கிற்கு சென்று பொல்லாதவன் படத்தின்  அந்த 20 டிக்கெட்டை பிளாக்கில் விற்றாராம். இதனால் போலீஸ் கிட்டவும் அவர் மாட்டிக் கொண்டதாக சமீபத்திய  பேட்டி ஒன்றில் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

18 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

41 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

16 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

17 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

17 hours ago