சுந்தர்சி-க்கு ராசி ஹீரோயினாக மறிய நடிகை?இனிமே அவர் இல்லாம படம் எடுக்கமாட்டாரு போலையே!

Published by
பால முருகன்

சுந்தர் சி : கடைசியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கும் வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது. அரண்மனை 4 படம் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பெரிய ஹிட் ஆகி இருப்பதன் காரணமாக திரும்பவும் அந்த அளவுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுக்க சுத்தர் சி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரண்மனை 4 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தினை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது வேறொரு தகவல் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், சுந்தர் சி அடுத்ததாக, வடிவேலு மற்றும் நடிகை ராஷிகண்ணாவை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறாராம்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தென்காசி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் கூட படப்பிடிப்பை வேகமாக முடித்துவிட்டு அதன்பிறகு அறிவித்து கொள்ளலாம் எனவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

ஏற்கனவே, சுந்தர் சி வடிவேலுவுடன் இணைந்த தலைநகரம், விண்ணர், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களின் காமெடி காட்சிகள் எல்லாம் இன்று வரை பலருடைய பேவரைட் ஆக இருந்து வருகிறது. இந்த சூழலில், மீண்டும் அவர் வடிவேலுவுடன் இணைந்து படம் செய்வது ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதைப்போலவே, இந்த படத்தில் நடிகை ராஷி கண்ணாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு வெளியான அரண்மனை 4 படத்திலும் நடித்து இருந்தார். எனவே, அவர் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை பார்த்த ரசிகர்கள் இல்லாமல் இனி படம் எடுக்கமாட்டாரு போலையே என சுந்தர் சியை கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

19 seconds ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

3 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

7 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago