நடிகர் சூர்யாவின் 41-வது படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். நந்தா, பிதாமகன், ஆகிய படங்களை தொடர்ந்து சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளார்கள். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை 2D நிறுவனம் சார்பில் சூர்யாவும் & ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படம் ஜெய்பீம் படம் போன்று கருத்துக்கள் கூறும் வகையில், படமாக்கப்படவுள்ளதால், OTT-யில் வெளியீட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். மேலும் இதனால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பொறுத்திருந்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது OTT-யில் வெளியாகிறதா என்பதை பார்ப்போம்.
மேலும், நடிகர் சூர்யா இந்த படத்தை ஒரு மாதத்திற்குள் முடித்து விட்டு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…