‘அந்த ஒரு வித்தை தான் …’! ரஜினி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி .!!

Published by
அகில் R

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ‘ட்ரெயிலர்’ வெளியாகி திரில்லர் படம் விரும்பி பார்க்கும் ரசிகர்களை மிகவும் கவனம் கவர்ந்துள்ளது.

மேலும், வரும் ஜூன்-14ம் தேதி இந்த படமானது திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ரீலிசுக்கான வேலை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் படத்தின் பிரமோஷன்களில் தற்போது விஜய் சேதுபதி , அவருடன் படக்குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பிரமோஷன்களில் தமிழ் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் உண்டான சில சுவாரஸ்யங்களை விஷயங்களையும் விஜய் சேதுபதி பகிர்ந்து வருகிறார்.

அதன்படி முன்னதாக பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. அது குறித்து பத்திரிகையாளர்கள், ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்டபோது, அவர் கூறியதாவது, “நான் மிகவும் வியந்து பார்க்கும் நடிகர் தான் ரஜினிகாந்த். அவர் இந்த வயதிலும் ரசிகர்களை கட்டிப்போடும் வித்தையை வைத்திருக்கிறார். அவருடன் நடிக்க கிடைத்த அந்த வாய்ப்பை நான் எப்படி தவற விடுவேன்” , என்று கூறி இருந்தார்.

ரஜினி குறித்து விஜய் சேதுபதி தான் விரைவில் இயக்குநராகவும் மாறுவேன் எனவும் அவர் கூறி இருந்தார். ஜூன்-14 ம் தேதி வெளியாக இருக்கும் மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் ஓடி முடித்த விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

10 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

1 hour ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

4 hours ago