‘அந்த ஒரு வித்தை தான் …’! ரஜினி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி .!!

Published by
அகில் R

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ‘ட்ரெயிலர்’ வெளியாகி திரில்லர் படம் விரும்பி பார்க்கும் ரசிகர்களை மிகவும் கவனம் கவர்ந்துள்ளது.

மேலும், வரும் ஜூன்-14ம் தேதி இந்த படமானது திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ரீலிசுக்கான வேலை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் படத்தின் பிரமோஷன்களில் தற்போது விஜய் சேதுபதி , அவருடன் படக்குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பிரமோஷன்களில் தமிழ் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் உண்டான சில சுவாரஸ்யங்களை விஷயங்களையும் விஜய் சேதுபதி பகிர்ந்து வருகிறார்.

அதன்படி முன்னதாக பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் விஜய் சேதுபதி. அது குறித்து பத்திரிகையாளர்கள், ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கேட்டபோது, அவர் கூறியதாவது, “நான் மிகவும் வியந்து பார்க்கும் நடிகர் தான் ரஜினிகாந்த். அவர் இந்த வயதிலும் ரசிகர்களை கட்டிப்போடும் வித்தையை வைத்திருக்கிறார். அவருடன் நடிக்க கிடைத்த அந்த வாய்ப்பை நான் எப்படி தவற விடுவேன்” , என்று கூறி இருந்தார்.

ரஜினி குறித்து விஜய் சேதுபதி தான் விரைவில் இயக்குநராகவும் மாறுவேன் எனவும் அவர் கூறி இருந்தார். ஜூன்-14 ம் தேதி வெளியாக இருக்கும் மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் ஓடி முடித்த விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
அகில் R

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

2 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago