சினிமா

அமர்க்களம் படத்தில் நடிக்க ஷாலினி எப்படி சம்மதித்தார் தெரியுமா? இயக்குனர் சொன்ன கதை!

Published by
பால முருகன்

நடிகை ஷாலினி இன்று தனது 43 -வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அஜித் மற்றும் ஷாலினியை வைத்து ‘அமர்க்களம்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரண் அமர்க்களம் படத்தில் ஷாலினியை நடிக்க வைக்க சம்மதம் வாங்க என்ன செய்தார் என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த படத்தில் நடிக்க வைக்க ஷாலினியிடம் இயக்குனர் சரண் நீங்கள் இந்த படத்தின் முதல் பாடலையே நீங்கள் தான் படுகிறீர்கள் என்று ஆசைகாட்டினாராம். பிறகு ஷாலினிக்கு அந்த சமயம் பாடல்களை பாடுவதில் விருப்பம் இருந்த காரணத்தால் அவரும் அந்த பாடலை பாடி கொடுத்து படத்தில் நடித்தாராம். இப்படி தான் அவரை படத்தில் நடிக்க சம்மதம் இயக்குனர் சரண் வாங்கினாராம்.

இது குறித்து அவர் பேசுகையில் ” அமர்க்களம் படத்தில் ஷாலினி அவர்களை நடிக்கச் சம்மதிக்க வைக்க நான் கையாண்ட யுக்திகளில் ஒன்று உங்கள் அறிமுகப் பாடலை நீங்களே பாடலாம் என்ற தூண்டில்! அந்த தங்க மீன் இன்று ஏகே வின் வைரத் தொட்டியில்” என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

ஆஹா! 400 பேருக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்திய அஜித்…’கிப்ட்’ கொடுத்து நெகிழ வைத்த விஜய்!

இதனை பார்த்த ஒருவர் நீங்கள் இப்படி சொன்னாலும் உங்களுக்கு அஜித் பட வாய்ப்புகள் கொடுக்கமாட்டார் என்பது போல கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் சரண் ” அன்புள்ள அசோகன்,ஏகே படம் குடுக்கறதுக்காகவோ அவர் இதெல்லாம் பாக்கறாருன்னோ நான் எதையும் பதிவிடறது கிடையாது. ஒரு டைரி குறிப்புக்காகவும் அவர் ரசிகர்களோட சில தருணங்களை பகிர்ந்துக்கறதுக்காகவும் மட்டுமே இவை” என கூறிஉள்ளார்.

மேலும், அஜித்குமார் மற்றும் ஷாலினி இருவருமே ஒன்றாக நடித்த முதல் திரைப்படமும் அமர்க்களம் தான். இந்த படத்தில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் காதலித்து கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இப்போது அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

9 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

9 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

11 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

11 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

12 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

12 hours ago