தூங்கிக்கொண்டு இருந்த வாட்ச்மேன்! கேட் ஏறி விஜயகாந்த் செஞ்ச விஷயம்?

Published by
பால முருகன்

Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும் தெரியும். அதைப்போலவே, படப்பிடிப்பு தளங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ அசந்து யாராவது தூங்கிக்கொண்டு இருந்தாலும் கூட அவர்களை எழுப்பாமல் அவர்களை தூங்கட்டும் என விட்டுவிடும் நல்ல மனம் கொண்டவர். ஒரு முறை கூட படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் தூங்கும் இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தாராம்.

விஜயகாந்த் வெளியே வேலையை முடித்துவிட்டு வந்து பார்க்கும்போது அவருடைய இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தாராம். பிறகு விஜயகாந்த் வந்ததை பார்த்த அங்கு இருந்த ஒருவர் வேகமாக அவரை எழுப்ப சென்ரறாராம். அதற்கு விஜயகாந்த் அவரை எதற்கு எழுப்புறீங்க அவர் நல்லா தூங்கட்டும் என்று கூறிவிட்டு அங்கு இருந்த மற்றோரு இடத்தில் மற்றவர்களுடன் தூங்கினாராம்.

அதைபோலவே, ஒரு முறை அதிகாலை 3 மணி அளவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் விஜயகாந்த் புலன் விசாரணை படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்தின் அலுவலகத்திற்கு சென்றார்களாம். அந்த சமயம் அலுவலகத்திற்கு  காவலாக இருந்த வாட்ச்மேன் ரொம்பவே அசந்து பூட்டு போட்டு கதவுக்கு அந்த புறம் தூங்கிக்கொண்டு இருந்தாராம். சாவியும் அந்த வாட்ச் மேன் கிட்ட தான் இருந்ததாம்.

அந்த வாட்ச்மேனுக்கு கிட்டத்தட்ட 60 லிருந்து 65 வரை வயது இருக்குமாம். சாவியும் அவர்கிட்ட இருந்த காரணத்தால் எப்படி உள்ளே செல்ல என்று விஜயகாந்த் மற்றும் ஆர்.கே.செல்வமணி யோசித்துக்கொண்டு இருந்தார்களாம். கார் ட்ரைவர் ஹாரன் அடித்து அந்த வாட்ச் மேனை எழுப்ப போனாராம். உடனடியாக விஜயகாந்த் வேண்டாம் அவர் பாவம் அசந்து தூங்கிக்கொண்டு இருக்கிறார் என்று கூறினாராம்.

பிறகு விஜயகாந்த் ஆர்.கே.செல்வமணியை தூக்கி கதவுக்கு அந்த புறம் இறங்க வைத்துவிட்டு அவரும் கேட் ஏறி குதித்து அலுவலகத்திற்குள் சென்றாராம். பின் ஆர்.கே.செல்வமணி எதற்கு இப்படி கஷ்ட்டப்பட்டு ஏறி குதிச்சு போகணும் அவரை எழுப்பி இருக்கலாமே என்று கேட்டாராம். அதற்கு விஜயகாந்த் பாவம் அவருக்கு வயது ரொம்ப இருக்கும் இப்போது நாம் எழுப்பிவிட்டோம் என்றால் திரும்ப அவருக்கு தூக்கம் வராது என்று கூறினாராம். விஜயகாந்தின் மனிதாபிமானத்தை பார்த்து தான் வியந்து போனதாக ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

2 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

2 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

3 hours ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

3 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

4 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

4 hours ago