Sivakarthikeyan [Image source : file image]
சிவகார்த்திகேயனை பலருக்கு பிடிக்க காரணமே, அவர் காமெடியான கதாபாத்திரங்களை தேர்ந்துஎடுத்து நடிப்பதால் தான். குறிப்பாக பலருக்கும், சிவகார்த்திகேயன் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது தான் மிகவும் பிடிக்கும். ஆனால், தற்போது அவர் நடித்துள்ள மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு காமெடியே இருக்காது என படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் கூறியுள்ளார்.
பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் ” இதற்கு முன்பு நான் எடுத்த மடோனா திரைபடம் எப்படி இருந்தது. அதில் இருந்து சற்று வித்தியாசமாக இந்த மாவீரன் படம் இருக்கும். படம் கண்டிப்பாக அனைவர்க்கும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக எந்த சமரசமும் செய்துக் கொள்ளவில்லை நான் உருவாக்கிய இந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் அப்டியே அட்டகாசமாகவும், சிறப்பாகவும், பொருந்தினார். அவருக்காக படத்தில் எந்த ஒரு காட்சியையும் நான் மாற்றவில்லை. நான் என்ன யோசித்தானோ அதே அப்படியே எடுத்தேன்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு காமெடி காட்சிகள் இருக்காது. படத்தில் அவர் காமெடி செய்யவேமாட்டார். அவரை சுற்றி உள்ளவர்கள் மட்டும் தான் காமெடி செய்வார்கள்” என கூறியுள்ளார். இவர் பேசியதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிலர் சற்று அதிர்ச்சியில் உள்ளார்கள்.
மேலும், இந்த மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். படத்தில் மேலும், சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…