கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Published by
பால முருகன்

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார்.

நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல படங்கள் முக்கியமான படங்களில் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தை கூறலாம். இந்த படம் இப்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டும் கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய் கலகப்பான ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் விஜய் ரசிகர்களை தாண்டி மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு கூட படம் பிடித்து இருந்தது என்றே சொல்லலாம். ஆனால், விஜய் இந்த படத்தில் நடித்ததே இயக்குனர் ரஜினி நடித்த கதாபாத்திரம் ஒன்றை காட்டி அதைப்போல தான் நடிக்க சொன்னாராம்.

தம்பிக்கு எந்த ஊரு படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தை விஜய்யிடம் காட்டி இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தை போல நீங்கள் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் தரணி கூறினாராம். இதற்கு முன்னதாக விஜய் அதிரடியான சண்டைகாட்சிகள் கொண்ட படத்தில் நடித்து இருந்தார்.

எனவே, விஜய்யை வேறு விதத்தில் காட்டவேண்டும் என்பதற்காகவே இப்படி விஜய்யை இயக்குனர் தரணி கில்லி படத்தில் நடிக்க சொன்னாராம். விஜய்யும் அதனை கேட்டுவிட்டு அப்படியே தரணி சொன்னதை உள்வாங்கி கொண்டு கில்லி படத்தில் நடித்தாராம். இந்த தகவலை இயக்குனர் தரணியே பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Published by
பால முருகன்

Recent Posts

”ரூ.3,000க்கு வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…

24 minutes ago

பாமக ஜிகே மணி.., எம்.எல்.ஏ அருள் மருத்துவமனையில் அணுமதி.!

சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…

45 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்து: 190 பேரின் டிஎன்ஏ பொருத்தம் உறுதி!

அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

4 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

4 hours ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

5 hours ago