நடுவில் ரோட்டில் நின்ற நடிகையின் கார்! இறங்கி விஜயகாந்த் செய்த விஷயம்?

Published by
பால முருகன்

Vijayakanth : நடிகையின் கார் நடு ரோட்டில் நின்றபோது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் பிரபலங்களுக்கு செய்த உதவிகளை பற்றிய தகவல் தினம் தினம் வெளிவந்து அவரை பாராட்ட வைத்து வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்க்கு விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி தான் ஒரு முறை வானத்தை போல படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கௌசல்யா கார் நின்ற போது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.

வானத்தை போல படத்தில் விஜயகாந்துடன்  நடிகை கௌசல்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் போது விஜயகாந்திற்கு நடிகை கௌசல்யாவுக்கு அந்த அளவிற்கு பழக்கம் கூட இல்லயாம். ஒரு முறை படத்தின் படப்பிடிப்பு மழையில்  நடந்து கொண்டு இருந்ததாம். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கௌசல்யா சீக்கிரமாகவே காரில் சென்றுவிட்டாராம்.

அந்த சமயம் பார்த்து கௌசல்யா சென்ற அந்த கார் பஞ்சர் ஆகிவிட்டதாம். மழையும் மிகவும் வேகமாக பெய்துகொண்டு இருந்ததாம். அப்போது படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் கொஞ்சம் லேட்டாக தான் பின்னாடி காரில் வந்தாராம். முன்னாடி கௌசல்யா நின்ற காரை பார்த்துவிட்டு என்னாச்சு என்ற விவரத்தை கேட்டு தெரிந்தாராம்.

அதன்பிறகு ட்ரைவர் பஞ்சர் ஆன விஷயத்தை அவரிடம் கூறினாராம். பின் தான் வந்த காரை ஓரமா நிறுத்திவைத்துவிட்டு அவருடைய கார் ரெடி ஆகி முடிக்கட்டும் அதன் பிறகு நாம் செல்லலாம் என்று தான் வந்த காரின் டிரைவரிடம் கூறிவிட்டாராம். கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் அந்த காரை சரி செய்ய நேரம் ஆனதாம். கௌசல்யா கார் ரெடியானது வரை  அங்கே விஜயகாந்த் நின்றாராம். ஆனால், அந்த சமயம் எல்லாம் அவ்வளவு பழக்கமே இல்லாமல் அவர் நின்றது மிகப்பெரிய விஷயம் என இந்த தகவலை கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Recent Posts

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

1 hour ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

2 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

2 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

5 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

6 hours ago