20 அடி உயரத்தில் இருந்து விழுந்த விஜயகாந்த்! வலியில் அவர் சொன்ன விஷயம்?

Published by
பால முருகன்

Vijayakanth : கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் எப்போதுமே தான் நடக்கும் படங்களில் சண்டை காட்சிகள் வந்தாலோ அல்லது ரிஸ்கான காட்சிகள் வந்தாலோ அதில் டூப் போடாமல் அவரே நடிப்பார். பலமுறை டூப் போடாமல் அவர் படங்களில் நடித்த காரணத்தால் அவருக்கு அடியும் பட்டு இருக்கிறது. அப்படி தான் ஒருமுறை கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பின் போது விஜயகாந்த் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாராம்.

கேப்டன் பிரபாகரன் படத்தில் காரில் இருந்து வேகமாக துரத்தி சென்று சுடுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டு வந்ததாம். அந்த காட்சியின் போது தான் விஜயகாந்த் 20 அடி உயரத்தில் ரோப்பில் தொங்கிக்கொண்டு இருந்தாராம். அந்த காட்சி எடுக்க 5 டேக் மேல் ஆகி கொண்டு இருந்ததால் திடீரென அந்த ரோப் அறுந்துவிட்டதாம். இதனால் விஜயகாந்த் கீழே விழுந்தாராம்.

விஜயகாந்த் கீழே விழுந்ததும் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டார்களாம். இதனால் படப்பிடிப்பு நின்று விடும் அளவிற்கு அந்த நேரம் ஆகிவிட்டதாம். கீழே விழுந்த விஜயகாந்திற்கு முதுகு பகுதியில் ரொம்பவே அடிபட்டுவிட்டதாம். இருந்தாலும் அந்த வலியை வெளிக்காட்டினால் மற்றவர்கள் சங்கடப்படுவார்கள் என நினைத்து வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம்.

பிறகு படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை தனியாக அழைத்து கொண்டு எனக்கு அடிபட்ட இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம். முக்கியமாக சண்டை பயிற்சி இயக்குனருக்கு தெரியவே கூடாது அவருக்கு தெரிந்தால் எனக்கு சண்டை காட்சிகளை குறைத்து கொடுப்பார். அப்படி அவர் குறைவாக கொடுத்தால் படம் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வராது.

எனவே அது சரியாக இருக்காது. என்னால் இப்போது நிற்க கூட முடியவில்லை எனக்கு ரொம்பவே முதுகு வலிக்கிறது. ஆனால், இது யாருக்கும் தெரிய கூடாது. எனவே, எனக்காக ஒரு சிறிய காட்சியை மட்டும் இப்போது எடுத்துவிட்டு என்னை இன்று ஒரு நாள் வீட்டிற்கு விடுங்கள் நான் நாளைக்கு திரும்ப வருகிறேன் என்று விஜயகாந்த் கூறிவிட்டாராம்.

20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தும் அந்த வலியை கூட தாங்கி கொண்டு படத்தை பார்த்து நினைப்பது எல்லாம் சாதாரண விஷயமே இல்லை விஜயகாந்த் போல யாருமே இருக்க முடியாது என ஆர்.கே.செல்வமணி அவரை புகழ்ந்து இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே.செல்வமணி  விஜயகாந்தை வைத்து புலன் விசாரணை படத்தையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

12 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago