kamal haasan [File Image]
இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், முதல் பாகம் அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்று இன்று வரை பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கிறது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 15 கோடி பட்ஜெட்டில் அந்த சமயம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது.
ஷங்கர் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் , மனிஷா கொய்ராலா , ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா , மனோரமா , கவுண்டமணி , செந்தில் , நெடுமுடி வேணு , கஸ்தூரி , நிழல்கள் ரவி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
1997-ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளிலும் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இதுமட்டுமின்றி, இந்தியன் படத்தை ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், அதில் தேர்வாகவில்லை.இருப்பினும், கமல்ஹாசனுக்கு படத்தில் நடித்ததற்காக தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகள் கிடைத்தது.
எனவே, படம் எப்படி இருக்கப்போகிறது? படத்திற்காக கமல்ஹாசன் என்னென்ன விருதுகள் எல்லாம் வாங்கப்போகிறார் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…