Categories: க்ரைம்

மாயமான மலாவி நாட்டு விமான விபத்து: துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் உயிரிழப்பு.!

Published by
கெளதம்

தென்னாப்பிரிக்கா: மாலவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா உட்பட அவருடன் பயணித்த 9பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டின் தலைநகரான லிலாங்வேயில் இருந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு (07.17GMT) Mzuzu-க்கு செல்லும் வழியில் காணாமல் போனதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. 51 வயதாகும் துணை அதிபர் சிலிமா உள்ளிட்ட 10 பேருடன் அந்த விமானம் சென்றது.

ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் தவித்ததால், திரும்பிச் செல்ல கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர், கட்டுப்பாட்டாளர்கள் விமானத்துடனான தொடர்பை இழந்தனர், அதன்பின், விமானம் மாயமாகியுள்ளது. இதனையடுத்து, Mzuzu அருகே Viphya மலைகளில் உள்ள ஒரு பரந்த காட்டு பகுதியில் சுமார் 600 பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று (ஜூன் 10) காணாமல் போன மலாவி தற்காப்புப் படையின் விமானத்தைத் தேடும் பணி இறுதியில் வருந்தத்தக்க வகையில், இன்று சோகத்தில் முடிந்துள்ளது என்பதை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒரு நாளுக்கும் மேலாக நீடித்த தேடுதலுக்கு பிறகு, விமானத்தில் இருந்த 6 பயணிகள் மற்றும் 3 இராணுவ வீரர்கள் உட்பட இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. 

தற்பொழுது, காணாமல் போன இந்த விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது எனவும், என்ன காரணத்தினால் விமானம் காணாமல் போனது என்பது குறித்தும், இது ஏதுனும் சதியா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago