அன்பு என்பது சொற்களால் வாழ்வதில்லை
அன்பை சொற்களால் விளக்கவும் முடியாது
செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு
என தனது வாழ்க்கையில் அன்பை செயல்களால் விளக்கி காட்டியவர் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இவர் ஆகஸ்ட் 26-ம் நாள், 1910-ம் நாள், ஒட்டோமான் பேரரசின் அக்ஸப் என்ற இடத்தில் பிறந்தார். கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த இவர், துறவற வாழ்க்கையை மேற்கொண்டு, ஒரு அருட்சகோதரியாவே வளம் வந்தார்.
அதுவரை
இரக்கத்தோடு வாழ்வோம்
என்பதை உலகிற்கு விளக்கிய இவர், எய்ட்ஸ், தொழுநோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு மையம், இலவச உணவு வழங்குமிடம், ஆலோசனை கூடம் என பல அமைப்புகளை ஏற்படுத்தினார். இவர் 45 வருடங்களுக்கு மேலாக ஏழை எளியவர்களுக்கு, நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கும், அனாதைகளுக்கும் தொண்டாற்றினார்.
உன்மேல் அன்பு செலுத்துபவர்களை நேசி
உன்மேல் கோபம் கொள்பவர்களை
அதைவிட அதிகமாக நேசி!
சமுகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாலும், இவர் மீது பல எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அவை எல்லாவற்றையும் சகித்து கொண்டு, அவர்களையும் நேசித்து வாழ்ந்த அன்புள்ளம் கொண்டவர் தான் அன்னை தெரசா.
வெறுப்பது யாராக இருந்தாலும்
நேசிப்பது நீங்களா இருங்கள்
என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டி, அன்பின் அடையாளமாக திகழ்ந்த இவர், செப்டம்பர் 5-ம் தேதி, 1997-ம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு, விண்ணுலகம் சென்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…