பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து பந்திப்போராவில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. அப்பொழுது, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை அடைந்ததும், துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உயர்மட்ட தளபதி அல்தாஃப் லல்லி கொல்லப்பட்டார் என்று தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி […]
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நேற்று உதம்பூரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள […]
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கி இருப்பது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் (Ferozpur) இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (Border Security Force) வீரராக பணியாற்றி வரும் பி.கே.சிங் எனும் ராணுவ வீரர், இந்திய எல்லை கடந்து பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம் நடவுபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான விசாக்களையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதன்படி, இனி எந்த பாகிஸ்தானிய குடிமகனும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது. மேலும், மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா […]
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் கீழ், இன்று கடற்படை ஐஎன்எஸ் சூரத்திலிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அழிவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை இந்தியா மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை […]
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை விதிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலை நடத்தியது TRF எனும் உள்ளூர் பயங்கரவாத அமைப்பு என்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பு என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லஷ்கர் இ தொய்பா […]
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலம் சூரத் நகரின் வராச்சா பகுதியை சேர்ந்த ஷைலேஷ் கல்தியா என்பவரும் ஒருவர். அவரும் தனது குடும்பத்தோடு பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள்ளார். தனது தந்தை ஷைலேஷ் கல்தியா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததைஅவரது மகன் நக்ஷ் கல்தியா சம்பவ […]
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி ஒரு வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் 22ம் தேதி அன்று, மதியம் 02:30 மணியளவில் 4-6 பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை […]
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர் கேக்கை எடுத்துச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது, பத்திரிக்கையாளர்கள் அவரிடம், கேக் எதற்கு, யாருக்கு? கொண்டாட்டமா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் எதற்காக கேக்கை உள்ளே எடுத்துச் சென்றார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. முன்னதாக, தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இன்று […]
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் […]
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ரேகுட்டா வனப்பகுதியில், தெலுங்கானா எல்லைக்கு அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த ஒரு பெரிய மோதலில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் .கடந்த மூன்று நாட்களில் இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய […]
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல் 6 பயங்கரவாதிகள் அங்கு சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் போல் வேடமிட்ட பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். இறந்தவர்களில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதும் […]
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு – காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு நடத்தியது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. எனவே, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் […]
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து டுடு-பசந்த்கர் பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன. பதுங்கிருந்த இடத்தை அடைந்ததும் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு ஜவான் படுகாயமடைந்தார். […]
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கை இடைநிறுத்துமாறு சமூக ஊடக தளமான X-ஐ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டது. […]
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது. ஏற்கனவே, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடமும் வெளியிடப்பட்டியிருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது இந்த தாக்குதலுக்கு பின்னால் 5 தீவிரவாதிகள், 3 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என […]
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் இரண்டு வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அடுத்ததாக மத்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. உதாரணமாக, அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, பாகிஸ்தானியருக்கு இந்திய விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என அதிரடியான நடவடிக்கைகளை […]
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு கூட்டம் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் மக்களின் பாதுகாப்புக்காக பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF) எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த TRF அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் ஆதரவு பெற்ற இயக்கம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்றே உள்துறை […]
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழும் வேளையில் சமூக வலைதளத்தில் சிலர் இந்த தாக்குதலுக்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினைரை குற்றம்சாட்டி வருகின்றனர். இதே தாக்குதலில் தான் அப்பாவி மக்களை காப்பாற்றும் பெரும் முயற்சியில் ஒரு இஸ்லாமிய தொழிலாளி தனது உயிரை இழந்துள்ள செய்தி மனிதம் காக்க இன்னுயிர் விட்ட உன்னத நிகழ்வாக மாறியுள்ளது. […]