டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டன. இதனால், இரு நாட்டு எல்லை அருகே இருபப்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தாரஸில் மாவட்டத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லை பகுதி மூடியதால் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் […]
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக எல்பிஜி சிலிண்டரின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாறும், அதன் தகவல்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் அதிகாலையில் புதுப்பிக்கப்படும். அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் ரூ.1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு […]
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில், முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுபற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்ததாக நடத்தப்படும் போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். மக்கள் தொகை […]
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கி காயமடைந்தவர்களை கேஜிஹெச் மருத்துவமனைக்கு மாற்றினர். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிம்மாச்சலத்தில் நேற்று பெய்த கனமழையால் இந்த விபத்து […]
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுக்கு […]
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ(Para SF) என NIA தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இத்தகவல் உறுதியானது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது. ஹாசிம் மூஸாவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் […]
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் முழு சம்பவமும் ஜிப்லைனில் சென்ற சுற்றுலாப் பயணிகளின் கேமராவில் பதிவாகியுள்ளது. அவர் Zip-Line-ல் பயணிக்கும் பொழுது, கீழே தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடுகின்றனர். சிலர் சுடப்பட்டு கீழே விழுகின்றனர். ஆனால், இவையேதும் தெரியாமல் சுற்றுலாப்பயணி சிரித்தபடி எஞ்சாய் செய்தார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக இந்தியா டுடேவிடம் பேசிய […]
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது . தாக்குதலில் இறந்த […]
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும் NCERT பரிந்துரைக்கும் பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அவ்வப்போது சில பாடத்திட்ட மாற்றங்களை NCERT பறித்துரைத்து வருகிறது. அதன்படி, 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் பற்றி இருக்கும் பாடத்திட்டங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் எனக் குறிப்பிட்டு இந்திய அரசர்கள் பற்றிய பாடத்திட்டமும்,மகா கும்பமேளா பற்றிய பாடத்திட்ட […]
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பிபிசி இந்தியாவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில், பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு எழுதிய கடிதத்தில், ”ஊடகங்கள் தங்கள் செய்திகளில் “பயங்கரவாதிகள்” என்பதற்குப் பதிலாக “போராளிகள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து […]
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை பிரிவினரை அனுப்பினர். முதலமைச்சர் அலுவலகம் மற்றும் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்ததால், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்புக் குழுக்கள் மூலம் முழுமையான ஆய்வு நடந்து வருகிறது. இருப்பினும், இதுவரை இரு இடங்களிலும் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நேற்றைய தினம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு […]
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியானது. SAARC விசா உள்ளவர்கள் நேற்று முன் தினம் […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விசா நிறுத்தம், தூதரக உறவு, வர்த்தக உறவு துண்டிப்பு, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல பாகிஸ்தான் அரசும், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா வருவது வாடிக்கையாகி வருகிறது. அதனை தடுக்க அரசும் உரிய முயற்சி எடுத்துவந்தாலும் அந்த போலி செய்திகள் பரவல் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு செய்தி தான், பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவத்திற்கு நிதி கேட்டு ஒரு போலி செய்தி வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. இந்திய ராணுவத்திற்கான ஆயுதங்களை நவீனபடுத்தவும், இந்திய ராணுவத்தை மேம்படுதவும் நன்கொடை அளிக்கும் திட்டத்தை […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு ஆதரவை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் பிரம்மா பற்றியும் பேசினார். அங்கு ஒரு கள மருத்துவமனை அமைத்தல், முக்கியமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடுதல் மற்றும் போர்வைகள், கூடாரங்கள், தூக்கப் பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பலவற்றை வழங்குதல் போன்ற இந்தியக் குழுவின் முயற்சிகளைப் […]
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டையே துயரத்தில் ஆழ்த்திய இந்தத் தாக்குதல் குறித்து ஆழ்ந்த வேதனை […]
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது இந்தியா தனது அடக்குமுறையைத் தீவிரப்படுத்திய நிலையில், பந்திபோரா, புல்வாமா மற்றும் ஷோபியன் மாவட்டங்களில் மூன்று தீவிர பயங்கரவாதிகளின் வீடுகளை அதிகாரிகள் இடித்துள்ளதாக அதிகாரிகள் இன்றைய தினம் தெரிவித்தனர். நேற்றைய தினம் பயங்கரவாதிகள் 4 பேரின் வீடுகளை […]
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான சூழலில் நேற்று நள்ளிரவு திடீரென பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் பகுதியில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை மீறி இந்திய எல்லைக்குள் 2வது நாளாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனை அடுத்து இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவம் மீது பதில் தாக்குதல் […]
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச் சேர்ந்த ஆரத்தி மேனன், ”காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 26 பேரில், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளில் அவரது தந்தை 65 வயதான என். ராமச்சந்திரனும் ஒருவர். கொச்சியின் எடப்பள்ளியைச் சேர்ந்த ராமச்சந்திரனின் உடல் நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் […]