டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் […]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 40 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதனையடுத்து, சுமார் 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு […]
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார். ‘இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், 4 முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அது மட்டும் இல்லாமல், ஏழு முறை எம்.எல்.ஏவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார். 1989 அன்று முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற சவுதாலா, கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் […]
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித தவறே காரணம் என மக்களவையில் தாக்கலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 2021 ம் ஆண்டு 8-ம் தேதி கோவை வந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெறவிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். பிற்பகல் 1 மணியளவில் வெலிங்டனில் தரையிறங்க சில […]
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற டிரக்குகளுடன் மோதியதில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்க் முன் இந்த சம்பவம் நடந்ததாகவும் காவல்துறையினர் கூறினார்கள். அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. தீப்பிடித்து எரிந்த தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை […]
டெல்லி : அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம், நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்து தலையில் அடிபட்டது. கீழே விழுந்து காயமடைந்தவுடன் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களை சந்தித்து “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது […]
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே வந்து சத்தமிட்டு கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக பாங்னோன் கொன்யாக் மாநிலங்களவை தலைவரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், இதற்கு கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் ” பழங்குடியின பெண் எம்பியை அவமதித்த ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை […]
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷாவுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டம், காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜக எம்பிபிகள் போராட்டம், பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கிழே விழுந்ததாக எழுந்த புகார் என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறின. பாஜக – காங்கிரஸ் என இரு கட்சியினரும் நாடாளுமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இப்படியான சூழலில் மக்களவை எதிர்க்கட்சி […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம். மறுபுறம் அமித்ஷா பேசியதை காங்கிரஸ் திரித்து பேசுகிறது என பாஜக போராட்டம் என இருந்த சூழலில் பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கிழே விழுந்தார். கிழே விழுந்ததில் தலையில் அடிபட்ட பாஜக எம்.பி தற்போது டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கூறுகையில், ராகுல் காந்தி அருகே […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல, காங்கிரஸ் கட்சியினர் அமித்ஷா பேச்சை திரித்து கூறுவதாக பாஜக எம்பிகளும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை அடுத்து மக்களவையில் கடும் அமளி, […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி நாடாளுமன்ற வளாகத்தில் தவறி விழுந்துள்ளார். இவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. இந்த எதிர்பாரா சிறு விபத்து குறித்து அவர் ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது அருகில் ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி அருகில் இருந்த ஒரு எம்பியை […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியம் வரும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அம்பேத்கர் குறித்த இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். நேற்று முதலே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா மன்னிப்பு கேட்க […]
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் பேசும்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என்று பேசியிருந்தார். இதனையடுத்து, அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்”அண்ணல் […]
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது அந்த படகின் மீது இந்திய கடற்படை படகு ஒன்று வேகமாக மோதியதில் கோர விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை தரப்பில் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான படகு எஞ்சின் சோதனைக்காக இன்று பிற்பகல் கடலுக்குள் சென்றது. அப்போது எதிர்பாரா விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என பேசினார். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும், ஜெய் பீம் ஜெய் பீம் என கோஷமிட்டு அமித்ஷா பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் […]
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி, பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று பேசியது, சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தான் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்ததாக’ பிரதமர் […]
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு எதிர்க்கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்வாறு அமித் ஷா விமர்சித்த நிலையில், அதனைக் கண்டித்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜெய் பீம்.. ஜெய் பீம்.. முழக்கங்களோடு நாடாளுமன்ற வளாகத்தில் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய […]
டெல்லி : நாடே எதிர்நோக்கிய முக்கிய மசோதா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மத்திய அரசு மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த கோரும் இந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்ட மசோதா மூலம், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி தேர்தல் நடைபெறும் சூழல் […]
புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று […]
டெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு எப்படி இந்த மசோதாவை அறிமுகம் செய்ய முடியும் என திமுகவும், தனிநபர் விருப்பத்திற்காகக் கொண்டுவரப்படுவதாக திரிணாமுல் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ […]