டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் தங்கள் வாழ்த்துக்களையும், அவரது நினைவுகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல, பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவை தனது தொலைநோக்கு பார்வையால் வடிவமைத்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எனது அஞ்சலி என தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரை ஒன்றை பிரதமர் மோடி தனது வலைதளபக்கத்தில் […]
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். […]
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் எழுந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு டங்ஸ்டர் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவியிலும் , தீர்மானமும் […]
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வழக்கமாக நடைமுறையில் இருக்கும் 1-8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உடனடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக […]
டெல்லி : சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் காலுக்கு தனி ரீசார்ஜ், இன்டர்நெட்டிற்கு தனி ரீசார்ஜ், SMSகளுக்கு தனி ரீசார்ஜ் ஆகியவை இருந்தன. ஆனால், அதன் பிறகு சமீப ஆண்டுகளாகவே, அனைத்திற்கும் ஒரே ரீசார்ஜ் போல மாறிவிட்டது. டேட்டா, வாய்ஸ் கால் , SMS ஆகியவை சேர்த்து தான் ரீசார்ஜ் செய்யும் நிலை […]
ராஜஸ்தான்: கோட்புட்லி மாவட்டம் கிராத்புரா கிராமத்தின் பதியாலி தானி என்கிற பகுதியில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, இதேபோல் டிசம்பர் 11 ஆம் தேதி ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுவன், மூன்று நாள் கழித்து நீண்ட நேரம் மீட்பு பணிகளுக்கு பிறகு மீட்கப்பட்டார். ஆனால், சிறுவன் இறந்துவிட்டதாக […]
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில் இருந்த போது அப்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து, ஆகஸ்ட் 5ஆம் தேதிமுதல் தற்போது வரை தஞ்சம் அடைந்து உள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து, அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள அந்நாட்டு நீதிமன்றம், அவர் மீதும், அவரது அமைச்சரவை, அப்போது […]
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில் எந்த பகுதியில் வைத்து செலுத்தப்படும் என்கிற விவரம் பற்றிய தகவலை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 30 ஆம் தேதி 21:58 IST (இந்திய நேரப்படி இரவு 09.58 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு சிறிய விண்கலங்களை குறைந்த பூமி வட்ட […]
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி இருந்தது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் உள்ளது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி […]
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் கைது, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் காட்டமான பேச்சு, இப்போது அல்லு அர்ஜுனின் வீடு தாக்குதல் என விவகாரம் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது, நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. BREAKING: Bail GRANTED to Allu Arjun house???? […]
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வானது ஆகஸ்ட் , செம்படம்பர் மாதங்களில் நடைபெறும். இந்த முதற்கட்ட நீட் கலந்தாய்வு நிறைவடைந்த பிறகும் காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை குறித்தும், அதற்கு சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்னிறுத்தியும் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை சந்தித்தார். அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். அதன் பிறகு நேற்று குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல் சபாவை சந்தித்து பேசினார். அப்போது இந்தியா – குவைத் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இருநாட்டு பாதுகாப்பு, கூட்டுறவு துறை, கலாச்சாரம், இந்தியாவின் […]
சென்னை: நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. சமீபத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கனா சட்டப்பேரவையில், “புஷ்பா 2 படம் முதல் ஷோவிற்கு அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வரக் கூடாது என காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதையும் மீறி அவர் முதல் ஷோவிற்கு சென்றார், மக்கள் கூட்டம் […]
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். இதில், குறிப்பாக பாப்கார்னுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிக்க பரிந்துரை செய்தது அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது, பாப்கார்னின் பல்வேறு பண்புகள் மற்றும் தயாரிப்பு முறைகளில் இருந்து வரி வேறுபாடுகிறது என்று கவுன்சில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. […]
தெலங்கானா : ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் காட்டமாக பேசியிருக்கிறார். ‘திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜூன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம்’ என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை முழுவதுமாக பார்த்த பிறகே அல்லு அர்ஜூன் வெளியே வந்ததாக கூறியுள்ளார். புஷ்பா 2 வெளியீட்டின்போது படம் பார்க்க வந்த […]
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் ஜிஎஸ்டி வரி பரிந்துரைகளை வழங்கினர். அதில் சில முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றிய ஆலோசனை நடைபெறும் என […]
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் அப்பகுதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தும்கூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனே, காரில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும், பயணிகளும் விரைந்து வந்தனர். SUV யில் இருந்து […]
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில் Centaurus Lifestyle Brands Private Ltd எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக PF பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் முறையாக PF பணத்தை EPFOவிடம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஆனால், […]
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு செல்கிறார். குறிப்பாக, இந்த பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியா தொழிலாளர்கள் தங்கி […]
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார், அவரது குடும்பத்தினரும் அச்சமடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் பார்சலுடன் ஒரு கடிதம் வர, அதில் ‘ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வீடு கட்டும் பணிக்காக மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை […]