Suvarotti Fry [Imagesource : Representative]
சுவரொட்டி என்பது ஆட்டு இறைச்சியின் ஒரு பகுதியாகும், இது ஆட்டின் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. சுவரொட்டியை வைத்து பெரும்பாலும் வறுவல், குழம்பு தயார் செய்கின்றனர். இந்த சுவரொட்டியில், புரதம், இரும்பு, துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இந்த சுவரொட்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,குறிப்பாக உடலில் இரத்த அளவை அதிகரிக்க பயன்படுகிறது. தற்போது இந்த சுவரொட்டி ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
சுவரொட்டியை துண்டுதுண்டாக வெட்டி சமைப்பதற்கு முன், அதனை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். சுவரொட்டி வெந்ததும், தண்ணீரை வடித்துவிட்டு, நமக்கு தேவையான அளவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : Potato Ring : உருளைக்கிழங்கில் அசத்தலான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி..!
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
சுவரொட்டி சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். சுவரொட்டி வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.இப்பொழுது சுவையான சுவரொட்டி கிரேவி தயார்.
இந்த கிரேவியை, இரத்தம் குறைவாக உள்ளக உள்ளாவார்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், விரைவில் உடலில் இரத்த அளவு அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…