பஞ்சாப்பை பதறவிட்ட பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்ல ஈஸி டார்கெட் !

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 102 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

pbks vs rcb

சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அதிரடியில் ஆரம்பித்து அதிரடியில் முடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்கிற வகையில் போட்டி ஆனது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பஞ்சாப் அணி அந்த அளவுக்கு மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரயன்ஷ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18 என ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அவர்கள் அதிரடி மூலம் அஸ்திவாரம் போட்டிருந்தாள் நிச்சயமாக அதிரடியாக இருந்திருக்கும்.

ஆனால், அவர்கள் விரிவாகவே ஆட்டமிழந்தது பஞ்சாப் அணியை தடுமாற செய்தது என்று கூறலாம். அவர்களுக்கு அடுத்ததாக வந்த ஜோஷ் இங்கிலிஸ் 4, ஸ்ரேயாஸ் ஐயர் 2, நேஹால் வதேரா 8, ஷஷாங்க் சிங் 3 ரன் எடுத்து ஆட்டமிழந்து வெளிறினார்கள். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் நினைத்த இலக்கை கூட பெங்களூர் அணிக்கு நிர்ணயம் செய்ய முடியவில்லை.

தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி நேரடியாகவே இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே, இப்படியான முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணி 102 ரன்கள் என்ற குறைவான இலக்கை வைத்துள்ளது பெங்களூர் அணியின் வெற்றிக்கு சுலபமாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் கிரிக்கெட் என்பது நிர்ணயம் செய்யமுடியாத போட்டி எனவே இந்த இலக்கை பெங்களூர் அடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்