லைஃப்ஸ்டைல்

Food : நெத்திலி மீனில் அசத்தலான ரெசிபி..! ட்ரை பண்ணி பாருங்க..!

Published by
லீனா

நாம் அனைவருமே கடல் உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், மீன்களில் பலவகை உண்டு. அதிலும் நெத்திலி மீன் என்றால் பலருக்கும் ஸ்பெசலான ஒன்று.  மீனை வைத்து நாம் வறுவல், குழம்பு, பொரியல் போன்ற வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றனர்.

இந்த மீனில் இதில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த மீனில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த உணவு. மேலும் இது இதயம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில் நெத்திலி மீன் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • நெத்திலி மீன் – 1 கிலோ
  • எண்ணெய் – 1/2 கப்
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – 1 இன்ச்
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 2
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் பால் – 1 கப்
  • கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து, மீன் முள்ளை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், சீரகம், பூண்டு, இஞ்சி  ஆகியவற்றை  சேர்த்து நன்கு வதக்கவும்.

சற்று வதங்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பின் நெத்திலி மீனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

நெத்திலி மீனை வைத்து குழம்பு, பொரியல் மட்டும் செய்து சாப்பிட்டவர்கள் இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம். இதனை வெறும் சாதத்துடனும் சாப்பிடலாம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago