முருங்கை கீரையில் உள்ள மகத்தான மருத்துவ குணங்கள் இதோ!

Published by
Rebekal

முருங்கைக்கீரை பொதுவாக அனைவர் வீட்டிலும் இருப்பதால், அதை சாதாரணமாகத்தான் கருதுகிறோம்.  நமக்கு முருங்கைக்கீரை எளிதில் கிடைப்பதால் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் தெரிவதில்லை. ஆனால் முருங்கைக் கீரை மற்றும் காயில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள்

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்தால் உடல் சூடு தணிந்து மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்கீரை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் உடம்பு வலிகள் நீங்கும். நாம் எடுத்துக்கொள்ளும் வைட்டமின் மாத்திரைகளில் இல்லாத சத்துக்கள் முருங்கைக்கீரையில் உள்ளது. அதிகப்படியான இரும்பு சத்துகளை கொண்டுள்ளதால், இரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

 

பற்களின் உறுதி, நீளமான முடி வளர, நரை முடி மறைய, தோல் நோய், வயிற்று புண், வாய்ப்புண் மற்றும் தலைவலி என அனைத்து நோய்களுக்குமே முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. அதுபோல நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவர்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிக அளவு சுரக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண் பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற முருங்கைக் கீரையை வேக வைத்து சாப்பிட்டால் போதும். 

முருங்கைக்காயின் மருத்துவ பயன்கள்

முருங்கை காயை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. இதை தொடர்ந்து சாப்பிடும் பொழுது ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தமடைகிறது. காய்ச்சல் மூட்டு வலி ஆகியவற்றிற்கு முருங்கைக்காய் சூப் மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல், கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிக்கும் திறனை ஊக்குவிப்பதற்கும்,  பிரசவத்தை துரிதப்படுத்தவும் இந்த முருங்கைக்காய் மிகவும் உதவுகிறது

Published by
Rebekal

Recent Posts

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

13 minutes ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

39 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

1 hour ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

3 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago