சென்னா மசாலா செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

Published by
K Palaniammal

Channa masala–  சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் .

தேவையான பொருட்கள் :

  • சுண்டல் =அரை கிலோ
  • தேங்காய் =அரை கப்
  • பச்சை மிளகாய்= இரண்டு
  • முந்திரி =5
  • தக்காளி =2
  • வெங்காயம் =3
  • பூண்டு=5  பள்ளு
  • எண்ணெய் =4 ஸ்பூன்
  • கடுகு =1 ஸ்பூன்
  • சோம்பு =1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் =ஒரு ஸ்பூன்
  • கரம் மசாலா= ஒரு ஸ்பூன்
  • சீரகத்தூள் =ஒரு ஸ்பூன்
  • மல்லித்தூள் =இரண்டு ஸ்பூன்

செய்முறை:

சுண்டலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .அரை கப் சுண்டலை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இப்போது பூண்டு மற்றும் , பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும். இப்போது இதன் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும்  சுண்டலையும் சேர்த்து எண்ணெய்  பிரியும் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.

Published by
K Palaniammal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago