channa masala
Channa masala– சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் .
சுண்டலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .அரை கப் சுண்டலை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இப்போது பூண்டு மற்றும் , பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும். இப்போது இதன் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும் சுண்டலையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…