HumanIntestine [file image]
நமது குடலில் தேங்கியுள்ள கழிவுகளை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு எந்த பொருளை பயன்படுத்தலாம் மற்றும் அன்றைய நாளில் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குடல் சுத்தம் செய்யும் முறையில் ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அது என்னவென்றால் தினமும் தான் நமது கழிவுகள் வெளியேறி கொண்டு தான் இருக்கிறது பிறகு ஏன் மாத்திரைகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இது மிகவும் தவறான கருத்து ஆகும்.
உதாரணமாக, நாம் தினமும் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் போன்றவற்றில் தண்ணீர் போய்க் கொண்டே தான் இருக்கிறது. பிறகு எதற்காக மருந்து மற்றும் டாய்லெட் கிளீனர் பயன்படுத்தி சுத்தம் செய்கிறோம். அதுபோல்தான் நம் அன்றாடம் மலம் கழித்தாலும் குறிப்பிட்ட அளவு நம் மலக்குடலிலேயே ஒட்டி இருக்கும்.
அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது பேதி மருந்துகள் மற்றும் இயற்கை முறைகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
பசியின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வாகும், நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தும், வயிறு உப்பியது போன்ற நிலை உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணையாக இருக்கும் .
தோல் வியாதிகளுக்கு முக்கிய காரணம் நாம் உண்ணக்கூடிய உணவுகளில் உள்ள நச்சுக்களை காரணமாகிறது. எனவே குடலை சுத்தம் செய்வதன் மூலம் தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு ,அலர்ஜி பிரச்சனைகள் குறைக்கப்படுகிறது.
ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம் செய்வது அவசியமானது.
இவற்றை உபயோகித்து மறுநாளும் பேதி ஏற்பட்டால் பொட்டுக்கடலை சாப்பிட்டு வரலாம் அல்லது லெமன் சாரில் உப்பு போட்டு குடித்து வந்தால் உடனே நிற்கும்.
பேதி மருந்துகளை சாப்பிடுவதற்கு மூன்று நாள் முன்பில் இருந்தே சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளவும், நெய் மற்றும் எண்ணெய் பசை உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீர் உணவுகள், பழச்சாறு போன்றவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் மற்றும் காரம் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆகவே இந்த முறைகளை பயன்படுத்தி ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நம் குடலை சுத்தம் செய்து நம் உடல் நலத்தை பாதுகாப்போம் நலமே நம் உடல் ஆரோக்கியம்.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…