puri break fast [Image source: file image ]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலர் விரும்பி பூரியை தான் விரும்பி சாப்பிடுவார்கள். இந்தியர்களுக்கு அவர்களின் பூரிகள் மீதான அன்புக்கும் அறிமுகம் என்பதே தேவையில்லை. பூரி மீதான இந்த அன்பு இன்றுவரை மாறாமல் உள்ளது. பூரியை மசாலா பூரி, கீரை பூரி, பெட்மி பூரி, லூச்சி பூரி, அல்லது பீட்ரூட் பூரி கூட, என வகை வகையாக செய்து சாப்பிட்டு பார்திருப்பீர்கள்.
ஆனால், நீங்கள் புதியதாக ஏதேனும் சுவையான பூரி செய்ய விரும்பினால், “காலிஃபிளவர் ஸ்டஃப்டு பூரி ” யை முயற்சி செய்து பாருங்கள். இதனை வெளிநாடுகளில் “Gobhi Puri ” என்று கூட கூறுவார்கள். இதனை நீங்களே உங்களுடைய வீட்டில் மிகவும் எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இதற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும், எப்படி செய்யலாம் என்பதை விவரமாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் ஆட்டா அல்லது முழு கோதுமை மாவு 3/4 டீஸ்பூன் நெய் 1 டீஸ்பூன் மஞ்சள் ருசி உப்பு காலிஃபிளருக்கு 1 கப் காலிஃபிளவர், துருவிய 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய 2 டீஸ்பூன் வேர்க்கடலை, பொடியாக பொடியாக நறுக்கியது, மிளகாய் 1/2 டீஸ்பூன் விதைகள் 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், உப்பு
செய்முறை
முதலில் பூரிக்கு மாவை தயார் செய்ய வேண்டும். இதற்கு, ஒரு பெரிய கிண்ணத்தில் ஆட்டா கோதுமை மாவு, மஞ்சள், உப்பு மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மென்மையான மாவை உருவாக்க படிப்படியாக தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு, தயாரிக்கப்பட்ட அந்த மாவை ஈரமான துணியால் மூடி, சுமார் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஸ்டஃபிங்கிற்கு, காலிஃபிளவர்களை தேவையான அளவிற்கு துருவி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு தேவையான அளவிற்காய் பச்சை மிளகாய், வறுத்த வேர்க்கடலை, சிவப்பு மிளகாய் தூள், சீரகம், கொத்தமல்லி இலைகள் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து 15 நிமிடங்கள் வரை இது அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
பிறகு இதனை பூரிக்காக பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். பிறகு மாவை தட்டையாக உருட்டவும். பின், எண்ணெய்யை ஒரு கடாயில் சூடாக வைத்துக்கொண்டு தட்டையாக தயார் செய்து வைத்திருக்கும் மாவை அதில் போட்டு சூடாக்கி எடுத்தீர்கள் என்றால் அட்டகாசமான பூரி ரெடி.
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…