கழிவுகளை கொட்டிய வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாசு ஏற்படுத்தும் வகையில் ஆலைக்கழிவுகளை அகற்றியதாக வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வலக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தூத்துக்குடி ஆட்சியர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மற்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஒரு கத்துக்குட்டி என விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குடும்பம் மட்டும் அரசியலில் கமலின் தலைமை பண்பு நிறைவாக உள்ளது என கூறியுள்ளார்.
வாடிப்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய சிவகங்கையை சேர்ந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வுபெற்ற நில அளவையர் வீட்டின் பூட்டை உடைத்து, 16 சவரன் நகை மற்றும் 83 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையனை காவல்துறையினர் தேடிவந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் […]
மதுரையில் சுப்புலட்சுமி அறிவியல் கல்லூரியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மைய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரையில் சுப்புலக்ஷ்மி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு என்ன என்பதை விளக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் அர்ச்சுனன், செயல் உதவியாளர் கிருஸ்ணமூர்த்தி முன்னிலையில் மாணவர்கள் […]
மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் உதவி குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் புற்றுநோய் உதவி குழுமத்தை நடிகை கவுதமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்த விழாவில் குழும தலைவர் முத்துராமலிங்கம், கண்காணிப்பாளர் சோம சுந்தரம் மற்றும் டீன் ராஜா முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் உள்ள குறைகள் பறி மக்கள் பலரும் குற்றம் சாற்றி வருகின்றன. மேலும் பல முகாம்களில் அளவுக்கு அதிகமான மக்கள் சில முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்விநியோகம் செய்ய வேண்டுமென்றும், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை தேவைக்கேற்ப அதிகரிக்க வேண்டுமென்று உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மேலும் நீட்டித்து கொடுக்க வேண்டுமென மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவ.30 வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பட புத்தகங்களை இழந்து தவிக்கும் மாணவர்கள் பலர் உள்ளனர். இதனையடுத்து, மதுரை ஹைகோர்ட் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் கொடுக்குமாறு […]
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இசை கலைஞர்கள் நிதி திரட்டியுள்ளனர். வாடிப்பட்டியில், தமிழக நாட்டுப்புற இசை பெருமன்றம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண நிதி திரட்டுவதற்காக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை மாவட்டத்தலைவர் வேலு தலைமை தாங்கினார். இந்த இசை குழுவினர் புயல் பாதிப்புகளை பாடலாக பாடி நிதி திரட்டியுள்ளனர்.
மதுரையில் தேசிய நூலக வார விழா ஒத்தக்கடையில் நூலகர் கோட்டைசாமி தலைமையில் நடைபெற்றது. மதுரையில் நூலகர் கோட்டைசாமி தலைமையில் ஒத்தக்கடையில் தேசிய நூலக வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு கவிதை போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்டம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு நூலக பணியாளர் காளீஸ்வரி அறிவுரை வழங்கினார்.
மதுரை – நெல்லை இடையை இரட்டை வழித்தடம் அமைக்க, நிலம் கையப்படுத்துவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. மதுரை – நெல்லை இரட்டை வழித்தடம் அமைப்பதற்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட வேண்டி உள்ளது. இந்நிலையில், இந்த வீடுகளை வாங்கியவர்கள் யாரும் பட்டா மாறுதல் செய்யவில்லை. பட்ட யாருடைய பெயரில் உள்ளதோ அவர்களுக்கு தான் அரசு இழப்பீடு வழங்கும். இதனையடுத்து, அவ்வாறு செய்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும் என்பதால், தற்போது பாத்திரம் வைத்திருப்பவர்களின் பெயருக்கு பட்டா […]
கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர என்று உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை மதுரை மேலுரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்தார்.மேலும் காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சமும் தென்னை ஒன்றுக்கு ரூ.50,000 தரவும் கோரிக்கை விடுத்தார்.சேதமடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் பல பொதுநல அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், பணியாளர்கள் சார்பில் ஒன்றரை டான் அரிசி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவனியாபுரம் மக்கள் நீதி மையம் சார்பில் இரண்டு வேன்களில் மருந்து, உணவு பொருட்கள் மாற்று […]
கஜா புயல் தொடர்பாக நவம்பர் 26ஆம் தேதி விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் பல தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை ஆட்சியளர்கள் மத்தியில் வெளிகாட்டி வருகின்றனர். […]
மதுரை விமான நிலையத்தில் தூய்மை பாரத விழிப்புணர்வு இரு சக்கர ஊர்வலம் மூலம் நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில் தூய்மை பாரதம் விழிப்புணர்வு இரு சக்கர ஊர்வலத்தை இயக்குனர் ராவ் துவக்கி வைத்தார். இதில் ஆணைய அதிகாரிகள், மத்திய தொழிலாக பாதுகாப்புப்படையினர், மாணவர்கள் இதில் பங்கேற்றனர். தீ தடுப்பு குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கமளித்தனர்.
மதுரையில் மருத்துவ தினவிழாவை முன்னிட்டு சாத்தன்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்க்கை மருத்துவ விழா நடைபெற்றது. திருமங்கலம் சாத்தான்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ தினவிழாவை முன்னிட்டு, இயற்க்கை மருத்துவ விழா நடைபெற்றது. இந்த விழாவை டாக்டர் பாலமுருகன் தலைமை தாங்கி நடத்தினார். மேலும் டாக்டர் அமுதா இயற்கை மருத்துவத்தின் பயன்கள் பற்றி பேசினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கடலூரில் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துத்தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் கடந்த 2 தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு […]
டெங்கு – பன்றிக்காய்ச்சலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெங்கு – பன்றிக்காய்ச்சல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.அதேபோல் தமிழக சுகாதாரத்துறை பதில் அளிக்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன்படி இன்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது.அதில் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு – 27 பேர் , டெங்கு காய்ச்சலுக்கு – 13 பேர் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.டெங்கு […]
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை மிரட்டிய கஜா புயலால் ஏராளமான மக்கள் தங்கள் உடைமைகளையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் நாகை,தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் மக்கள் அடிப்படை தேவையின்றி தத்தளித்து வருகின்றனர்.மேலும் கடந்த 2 தினங்களாக மின்சாரம் இன்றியும் சுகாதார சீர்கேடுடன் அங்கு தத்தளித்து வரும் மக்கள் கடும் கோபத்தை […]
கஜா புயலால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய மழையால் 2000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கஜா புயலால், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் அறுவடைக்கு தயாராயிருந்த 2000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முறிந்து விழுந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில வாரங்களில் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராயிருந்த நிலையில், அவர்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் கஜா புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். கஜா புயலால் சில மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதை 20 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் 28 வீடுகள் பாதியளவு சேதமடைந்துள்ளது. உயிர் பலிகள் எதுவும் இல்லை. கரையோர பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.