திருமங்கலம்:வருவாய்த்துறையினருக்கு திருமங்கலம் வழியாக தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு விமானநிலையம் ரோடு, கரிசல்பட்டி விலக்கு, ராஜபாளையம் ரோடு, கப்பலுார் டோல்கேட், சோழவந்தான் ரோடு ஆகிய பகுதிகளில் தாசில்தார் நாகரத்தினம், முதுநிலைவருவாய் உதவியாளர் மயிலேறிநாதன், வருவாய் ஆய்வாளர்கள் சசிகுமார், முருகன் அடங்கிய குழுவினர் வாகனத் தணிக்கை செய்தனர். அப்போது திருச்சியிலிருந்து மணல் அள்ளி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் 9 லாரிகளில் போலி அனுமதிசீட்டுகளுடன் மணல் கடத்தி […]
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அறைகளில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.சோதனைமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று(ஏப்.,19) மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், இன்று பதிவாளர் சின்னையாவை தங்களது அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். […]
உசிலம்பட்டி:சின்னவெள்ளை மனைவி வீரம்மாள் இவர் மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள மல்லப்புரத்தைச் சேர்ந்தவர்.இவர் கணவர் இறந்து விட்டதால் தனி வீட்டில் வசித்து வந்தார். 2 மகன்கள் இவருக்கு உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இரண்டாவது மகன் தங்கச்சாமி அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “நீ மூத்த மகனுக்குத்தான் எல்லாம் செய்கிறாய்” எனக்கூறி தாய் வீரம்மாளிடம் தங்கச்சாமி தகராறு செய்துள்ளார்.இந்த சமயத்தில் நேற்று மதியம் வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்த வீரம்மாளின் தலையில் தங்கச்சாமி திடீரென கல்லைத்தூக்கிப் […]
தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் , பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலா தேவி வற்புறுத்திய ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலாதேவி மீது வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை […]
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணிலிகரையைச் சேர்ந்த ரங்கீஸ் மீரா என்பவர் தாக்கல் செய்த மனுவில். தனது மகன் கடந்த 2010ம் ஆண்டில் புனித கரோட்டி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது சக மாணவன் கல்லால் எறிந்ததில், வலக்கண் பார்வை நிரந்தரமாக பாதிக்கப்பட்டதாகவும், எனவே பள்ளி நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இம்மனு மீது நீதிபதி முரளீதரன் அளித்த உத்தரவில், பள்ளியில் […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க துறைசார் விசாரணைக் குழு அமைக்கும் திட்டத்தை, திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்ற சில முறையற்ற நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தின் பெயரும் இழுக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, பேராசிரியர்கள் மற்றும் துணைப் பேராசிரியர்கள் அடங்கிய 5 நபர் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழக வேந்தர் […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,பேராசிரியை நிர்மலா தேவி மீதான புகார் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேராசிரியை மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பின்னர் துணைவேந்தர் செல்லத்துரை, சிண்டிகேட் உறுப்பினர் திவாகர் 5 பேரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு பேராசிரியை நிர்மலா தேவி […]
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில்,மதுரையில் தீக்குளிக்க முயன்ற 5 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்திற்கு நாளை பூமி பூஜை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார், புறப்பட தயாரானபோது, அங்கு வந்த ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். தங்களது மகன்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்றவர்களை தனிப்படை போலீசார் கைது செய்து கொண்டுவந்துள்ளதாகவும், அவர்களை […]
பத்திரப்பதிவுத்துறை சார்பில் , ஆன்லைன் பத்திரப்பதிவுக்கு முன்னர், பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறை நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பத்திரப் பதிவை மேம்படுத்துவது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பத்திரப்பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பத்திரப்பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், பிப்ரவரி 12ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆன்லைன் பத்திரப்பதிவு 100 விழுக்காடு அமல்படுத்தப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதில் உள்ள குறைகளைக் […]
திருமங்கலம்: ஹேமந்த்சிங் இவரது மனைவி பிங்கி இருவரும் அஸ்ஸாம் மாநிலம், அலகுங்குடி பகுதியை சேரந்தவர். இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.வேலை தேடி ஹேமந்த்சிங் திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டிக்கு வந்தார். இங்குள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார். நேற்று முன்தினம் அங்குள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஹேமந்த்சிங் குளிக்க சென்றார். அப்போது குவாரி தண்ணீரில் மாட்டி உயிரிழந்தார். இதனை அடுத்து தகவல் தெரிந்து அங்கு விரைந்த திருமங்கலம் தாலுகா போலீசார் அவரது உடலை […]
திருமங்கலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாயில் தாலுகா அளவில் நடைபெறுகிறது. அதன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமிற்கு மண்டல துணை வட்டாட்சியர் அழகர்சாமி தலைமை வகித்தார். வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள், ‘‘சிப்காட் அமைவதாக கூறிய சிவரக்கோட்டை பகுதியில் அதிகாரிகள் சிலர் இடம் வாங்கியுள்ளனர். இதனால் விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் சிப்காட் திட்டத்தினை கொண்டு வருவார்களோ […]
மதுரை:தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்காக உச்சநீதி மன்றத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இதை கண்டித்தும், இந்த சட்ட திருத்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரையில் ஏப்.11ம் தேதி ரயில்மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர்.அவர்கள் அறிவித்தபடி நேற்று பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பு வந்தனர்.ஆனால் முன்னதாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருப்பினும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சட்டதிருத்தம் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை […]
மதுரை மாநகர காவல் துறையால், புதிய மொபைல் ஆப் மூலம், வீடுகளில் திருட்டு நடக்காமல் கண்காணிக்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் ஆள் இல்லாததை பயன்படுத்தி, கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், மதுரை மாநகர காவல் துறை சார்பில், புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வீட்டைப் பூட்டி விட்டு […]
வாடிப்பட்டி:செம்மினிப்பட்டி கிராமம் வாடிப்பட்டி ஓன்றியத்திற்குட்பட்டது . வாடிப்பட்டி துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள இக்கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் இரும்பு மின்கம்பம் ஒன்று அடிப்பகுதி துருப்பிடித்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை மின்சாரா வாரியத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இரும்பு மின்கம்பத்தினை சரிசெய்யும் வகையில் புதிதாக சிமெண்ட் மின்கம்பம் அமைக்கப்பட்டது.ஆனால், இதுவரை மின் இணைப்பு அந்த சிமெண்ட் கம்பத்திற்கு மாற்றப்படவில்லை. ஒடிந்து கிழே விழும் நிலையில் உள்ள அந்த பழைய இரும்பு மின்கம்பத்தில் தான் […]
மதுரை: மதுரை மாநகரில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் போலீசார் ரோந்து பணியில் கடந்த சில நாட்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காவல்நிலையங்களில் காவல் அதிகாரிகள் கட்டபஞ்சாயத்து,மற்றும் வசூல் வேட்டையில் […]
தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பியின் மதுகான் நிறுவனத்துக்கு தூத்துக்குடி மற்றும் மதுரையில் சுங்கசாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வரும் நிலையில் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி நாமா நாகேஸ்வர ராவின் மதுக்கான் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு மதுரை தூத்துக்குடி பைபாஸ் சாலைப்பணியை ஒப்பந்தம் எடுத்தது. 2009ல் பயன்பாட்டு வரவேண்டிய சாலை 2011 ல் தான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. […]
திமுக உள்ளிட்ட கட்சியினர் மதுரை இரயில் நிலையம் முன் 1000த்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு […]
குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 44ல் கே.கே.நகர் பகுதிகளில் முடிவு செய்யப்பட்டது. புதிய இரண்டு அடுக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சியின் சுகாதாரப் பணிக்கு வழங்கப்பட்டது.இது இரு அடுக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் நீலம், பச்சை நிறத்தில் 12 குப்பை கூடைகள் உள்ளன.மேலும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்க ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது . இதற்கு முன் கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஏப். 8ம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். மேலும் கர்நாடக தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்றும் ,திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் மக்களுக்காக போராடினால் கலந்து கொள்வோம் […]
தேனி குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆனது. தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர். இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார்.இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைபேட்டை சிவசங்கரி உயிரிழந்தார் […]