ஆந்திராவில் மறைந்த கணவருக்கு கோவில் கட்டி வழிபட்ட மனைவி.
ஆந்திராவில், பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்ற பெண் அங்கிரெட்டி என்பவரை திருமணம் செய்தார். இருவரும் பாசப்பறவைகளாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக அங்கி ரெட்டி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல், தினமும் வருந்தி வந்த இவர், தனது கணவர் தன் அருகிலேயே இருப்பதாக உணர்ந்தாலும், அங்கி ரெட்டி தனக்கு கோயில் கட்டும்படி சொன்னதாலும் தான் இந்த கோவிலை கட்டியதாகவும் பத்மாவதி கூறியுள்ளார்.
இந்த கோவிலில் தனது கணவரை பளிங்கு உருவ சிலையாக அவர் நிறுவியுள்ளார். இந்நிலையில் அவரது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் ஆகிய சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். கோவில் கட்டி வழிபாடு நடத்துவதோடு நின்றுவிடாமல், பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார். மறைந்த தனது கணவருக்கு கோவில் கட்டி வழிபடும் இந்தப் பெண்ணின் செயல் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…