உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருபதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் போலீசாருடன், பாதுகாப்புப்படையினர் இணைந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை மோதலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேபோய் மணிஷ் என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.
அவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மணிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அவரது உடல் மத்திய பிரதேசம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சேபோய் மணிஷ் உடலுக்கு மத்திய பிரததேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேபோய் மணிஷ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…