திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி – மம்தா பானர்ஜி அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்குவங்கம் மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 6-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை (கேஐஎஃப்எஃப்) துவக்கி வைத்த பின் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார். திரையரங்குகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் திரையரங்குகளில் வழக்கமான சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் சரியாக பராமரிக்குமாறும் திரையரங்கு உரிமையாளர்களைக் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கு முன் தமிழக அரசு திரையரங்குகளுக்கு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, இது மத்திய அரசு நெறிமுறைகளுக்கு எதிரானவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தலைமை செயலாளர் சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த ஒரு நாள் கழித்து, தற்போது திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் ஊரடங்கு ஜனவரி 31 வரை அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மத்திய அரசு அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை ரத்து செய்துள்ளது தமிழக அரசு. வேண்டுமானால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் போட்டுக் கொள்ளலாம் என்றும் மறுஉத்தரவு வரும் வரை 50% பறவையாளர்களுக்கும் மட்டும் அனுமதி எனவும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

24 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago