Categories: இந்தியா

கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.! திருமணத்திற்கு சென்ற 11 பேர் பலி…

Published by
கெளதம்

சத்தீஸ்கரில் ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் நேற்று இரவு எஸ்யூவி கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலம் சோரம் பட்கான் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் ஒரு திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். இரவில் அவர்கள் பயணம் மேற்கொண்ட கார், எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அம்மாநில தேசிய நெடுஞ்சாலை-30 இல் புரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்தாரா கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது, உயிரிழந்த அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago