Chhattisgarh Road Accident [Image Source: etv bharat]
சத்தீஸ்கரில் ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் நேற்று இரவு எஸ்யூவி கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலம் சோரம் பட்கான் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் ஒரு திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். இரவில் அவர்கள் பயணம் மேற்கொண்ட கார், எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அம்மாநில தேசிய நெடுஞ்சாலை-30 இல் புரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்தாரா கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தற்போது, உயிரிழந்த அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…