ஆந்திரா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பில் வைத்து தனது காதலிக்கு தாலிக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியை காதல் செய்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக இருவருக்கும் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சமீபத்தில் பள்ளிகள் திறந்ததை அடுத்து அந்த மாணவன் இனி காதலியை பிரிய மனமில்லாமல் அவரது கழுத்தில் மஞ்சள் தாலியை கட்டியுள்ளார் .அதாவது கடந்த 17-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பில் வைத்து அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளனர் .இதனை அதே வகுப்பில் பயிலும் வேறொரு மாணவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து , இந்த செய்தி பள்ளி முதல்வர் காதுக்கு செல்ல திருமணம் செய்து கொண்ட இருவருக்கும், மற்றும் உடந்தையாக இருந்த மாணவிகளுக்கும் டி.சி வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர் . இருவருக்கும் 18 வயது ஆகவில்லை என்பதால் இந்த திருமணம் செல்லாது என்று கூறி பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.2கே கிட்ஸ்களின் இந்த அட்டகாசத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…