உயிரை காப்பாற்ற 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. விமானத்தில் பறந்த மருத்துவர்கள்..!

Published by
Sharmi

நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக 12 மணிநேரம் பிபிஇ கிட்டுடன் 2,500 கி.மீ. தொலைவு விமானத்தில் மருத்துவர்கள் பயணித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை காப்பாற்றி வருகின்றனர். அப்படி நோயாளியின் உயிரை காப்பாற்ற 12 மணி நேரம் பிபிஇ கிட்டுதான் 2,500 கி.மீ தொலைவு பயணித்துள்ளனர் ஒரு மருத்துவர்கள் குழு. இது குறித்து இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கோவினி பாலசுப்பிரமணி கூறியிருப்பதாவது, மே மாதத்தின் மத்தியில் லக்னோவை சேர்ந்த 8 மாதக்குழந்தையின் தந்தையான ஒருவருக்கு கடுமையாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் தெரியவந்தது. மேலும், 30 வயதாகும் அந்நபருக்கு கடுமையான சுவாசப்பிரச்சனை இருந்துள்ளது.

அந்த நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு வணிக விமானத்தை எடுத்துக்கொண்டு டெல்லிக்கும் பின்னர் அங்கிருந்து லக்னோவிற்கும் சென்றுள்ளனர். நோயாளியை அடைந்த மருத்துவர்கள் குழு அவரின் ஈ.சி.எம்.ஓ நிலையை கவனித்துள்ளனர். மிக மோசமாக இருந்ததால், இவரை அங்கிருந்து ஈ.சி.எம்.ஓ உதவியுடன் தனியார் விமானத்தில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த பயணம் மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்ததாக மருத்துவர் கோவினி தெரிவித்துள்ளார். விமானத்தில் தொடர்ந்து நோயாளியின் பிஓ2 நிலையை பராமரிக்க வேண்டும் எனவும், அவரது அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் 5 மணிநேர பயணமான இது எங்களுக்கு சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

ஈ.சி.எம்.ஓ என்பது நோயாளியின் உடலுக்கு வெளியே இரத்தத்தை இதய-நுரையீரல் இயந்திரத்திற்கு செலுத்தி, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட இரத்தத்தை உடலில் உள்ள திசுக்களுக்கு திருப்பி அனுப்பும் செயலாகும். தற்போது சென்னைக்கு நாங்கள் விமானத்தில் வந்து 35 நாட்கள் ஆகிவிட்டது. நோயாளி ஈ.சி.எம்.ஓ உதவியுடன் தான் இருந்து வருகிறார். இவருக்கு நுரையீரல் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. நுரையீரல் நன்கொடையாளருக்கு காத்திருப்பதாகவும், இவரது நுரையீரலை புதுப்பிக்கவும் முயற்சி செய்வதாக கூறியுள்ளார் டாக்டர் கோவினி. எங்களின் குழு அன்று சரியான நேரத்தில் செல்லவில்லை என்றால் 2 அல்லது 3 நாட்களில் அவர் இறந்திருப்பார் என்று கூறியுள்ளார். டாக்டர் கோவினி மற்றும் அவரது மருத்துவக்குழுவை போன்று பல மருத்துவர்கள் இந்த தொற்று காலத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

3 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

3 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

5 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago