கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு பாதிப்பு எதுவுமில்லாமலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மர்மமான வைரஸ் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இன்னும் கொரோனாவின் தாக்கமே குறையாத நிலையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குழந்தைகள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகரில் உள்ள குர்சாலி கிராமத்தில் 12 பேர் கொரோனா தொற்று மற்றும் டெங்கு அறிகுறி இல்லாமல் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.
மர்மமான வைரஸால் தாக்கப்பட்டு இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், இறந்தவர்கள் யாருக்குமே டெங்கு தொற்று இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுபேஷ் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…