12 பேர் உயிரிழப்பு – கொரோனாவும் இல்லை, டெங்குவும் இல்லை …!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு பாதிப்பு எதுவுமில்லாமலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மர்மமான வைரஸ் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இன்னும் கொரோனாவின் தாக்கமே குறையாத நிலையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக குழந்தைகள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்திலும் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் நகரில் உள்ள குர்சாலி கிராமத்தில் 12 பேர் கொரோனா தொற்று மற்றும் டெங்கு அறிகுறி இல்லாமல் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.

மர்மமான வைரஸால் தாக்கப்பட்டு இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும், இறந்தவர்கள் யாருக்குமே டெங்கு தொற்று இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுபேஷ் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

1 hour ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

3 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

4 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

5 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

5 hours ago