கொரோனா தடுப்பூசி போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திய 120 வயது மூதாட்டி..!

Published by
Sharmi

காஷ்மீரில் தோலி தேவி என்ற 120 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே அனைவரும் ஆதாரமாக கொண்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தடுப்பூசி போடும் பணியை ஆரம்பித்தனர். இந்தியாவில் இதுவரை 19,50,04,184 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,30,58,913 ஆக உள்ளது.

இந்நிலையில், 120 வயது மூதாட்டி தோலி தேவி என்பவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள உதம்பூர் மாவட்டத்தின் கட்டியாஸ் கிராமத்தை சேர்ந்தவர். கொரோனா தடுப்பூசி செலுத்திய மூதாட்டி தோலி தேவி கூறுகையில், இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி. அதன் காரணத்தினால் தான் நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

அதனால் நீங்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். நானே பயமில்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது உங்களுக்கு என்ன..? இந்த தடுப்பூசியால் நான் எந்தவொரு பக்கவிளைவையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். பாட்டியின் விழிப்புணர்வை கண்டு பலரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
Sharmi

Recent Posts

மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : தமிழ்நாடு அரசு 2023-ஆம் ஆண்டு முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை (கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்)…

1 minute ago

35 லட்ச ரூபாய் முறைகேடு…? “தினேஷ் மாஸ்டர் பதவி விலகனும்”..கொந்தளித்த சங்க உறுப்பினர்கள்!

சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…

44 minutes ago

“தமிழினத் தலைவர் கலைஞரின் பிறந்தநாள்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…

1 hour ago

நார்வே செஸ் தொடர் : அர்ஜுன் எரிகைசியை வீழ்த்திய குகேஷ்!

நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…

2 hours ago

முதல் முறையாக கோப்பையை வெல்லப்போவது எந்த அணி? இறுதிப்போட்டியில் பெங்களூர் பஞ்சாப் மோதல்!

அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…

2 hours ago

கமல் விவகாரம்: ”நாம் எதிரிகள் அல், நாம் அண்டை மாநிலத்தவர்கள்” – டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்.!

கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ​​"கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…

11 hours ago